Wednesday, March 22, 2017

இரட்டை இலை சசிகலா தரப்பிற்கே கிடைக்கலாம்



2l


இரட்டை இலை சசிகலா தரப்பிற்கே கிடைக்கலாம், ஆதரவு எண்ணிக்கை அங்கேதான் அதிகம்


முறைகேடான வகையில் சசிகலாவும் தினகரனும் பதவிக்கு வந்தார்கள் என பன்னீர் தரப்பு நிரூபித்தால் மட்டுமே சிக்கல் உருவாகும், அப்பொழுது வேண்டுமானால் முடக்கபடலாம்


தீபாவிற்கு எல்லாம் இரட்டை இலை கிடைக்க 100% வாய்ப்பு இல்லை, வாசலிலே விரட்டிவிடுவார்கள்





ஒருவேளை சசிகலா தரப்பிற்கு கிடைத்துவிட்டால் நிச்சயம் அது அவர்களுக்கு பெரும் வெற்றி, காரணம் இரட்டை இலை என்பது அலாவுதின் விளக்கு போன்றது

பெரும் பூதம் அதற்கு கட்டுபட்டு நிற்கின்றது, அது கண்களுக்கு தெரியாதது தேர்தலில் மட்டுமே தெரியும்

அப்படி சசிகலா தரப்பு இரட்டை இலை பெற்று பலம்பெற்றுவிட்டால்...சிலர் சொல்வது போல தமிழக‌ சொத்துக்களை விற்றுவிட்டு கிளம்பவேண்டியதுதான்

ஆனால் அதில் ஒரு திருத்தம், சொத்துக்களை விற்றுவிட்டு செல்வதா??

வாய்ப்பே இல்லை, சொத்துக்களை அவர்களே எடுத்துகொள்வார்கள், கங்கை அமரனே சாட்சி

ஆக சொத்துக்களை கொடுத்துவிட்டு கிளம்பலாம் என்பதே மிகசசரியான வார்த்தை

பார்க்கலாம், அந்த இரட்டை இலை எனும் விளக்கு யாரிடம் சிக்குகின்றதோ அதை பொறுத்தது தமிழக அடுத்த 10 ஆண்டு கால அரசியல்

10 அல்லது 15 வருடத்திற்கு வருடத்திற்கு பின் நிச்சயம் இரட்டை இலை மங்க தொடங்கும், தலைமுறை மாற்றம் அதனை செய்யும்.

ஆனால் அந்த 10 ஆண்டுகளும் பெரும் சீரழிவினை கொடுக்கும், அதிலிருந்து தமிழகம் மீள 100 ஆண்டுகள் ஆகலாம்..

தமிழகத்து தலைவிதி இன்று தெரியபோகின்றது..












No comments:

Post a Comment