ஆர்.கே நகரில் திமுக வேட்பாளர் நிறுத்தபட்ட விதம் குறித்து பல விவாதங்கள், அவர் புதுமுகம், பிரபலமில்லாதவர் எப்படி இந்த முக்கியமான தேர்தலில் வெற்றிபெறுவார், திமுக தேர்வு சரியில்லை என பல விமர்சனங்கள்
திமுக என்றுமே வேட்பாளரின் தனிபலம் கொண்டு வெல்லும் கட்சி அல்ல
ஆனானபட்ட காமராஜரை வீழ்த்த, சீனிவாசன் எனும் மிக இளையவரைத்தான் நிறுத்தினார்கள். காமராஜரை வீழ்த்தியும் காட்டினார்கள்
அது அன்று பெரும் ஆச்சரியமான விஷயம், காமராஜரை வெல்வது என்பது அன்று கனவிலும் நடக்காத விஷயம், ஆனால் நடந்தது.
அந்த வெற்றியில் சீனிவாசன் கொஞ்சம் ஆட, அமைதியாக சொன்னார் கலைஞர்
"இலக்கை ஒரு அம்பு சரியாக தாக்கினால் அது அம்பின் வெற்றி அல்ல, மாறாக அதை எய்தவனின் வெற்றி
அம்பு குதித்தாட ஒன்றுமே இல்லை, அதனை செலுத்தியவனே கொண்டாடபடவேண்டியவன்
வெற்றி என்பது அம்பினை செலுத்துவன் கையில் இருக்கின்றது"
அது ஆர்.கே நகருக்கும் பொருந்தும்
வெற்றி என்பது வேட்பாளரை பொறுத்து அல்ல, மாறாக தலைவன் வகுக்கும் வியூகத்தின் படியே அமையும்.
அதனால் உறுதியாக சொல்லலாம், வேட்பாளர் தேர்வு எல்லாம் பெரிய விஷயம் இல்லை...
அப்படி காமராஜரையே வீழ்த்திகாட்டினார் கலைஞர்,
அவர் மகனுக்கு பெரும் சவாலாக காமராஜர் போன்றவர்கள் கூட இல்லை , மாறாக தினகரன் தான் கிடைத்திருக்கின்றார்
தேர்தல் முடிவில் தெரியபோவது ஸ்டாலினின் திறமை எப்படி என்பதுதான்...
முன்பொரு காலத்தில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்று காங்கிரசை பதவியில் அமர்த்தியதும் அவர்தான், 40 தொகுதியிலும் அவர் எய்த அம்பு அப்படி
No comments:
Post a Comment