Thursday, March 30, 2017

கலைஞரின் பேரன்கள் எப்படி படமெடுக்கலாம்?

கலைஞரின் பேரன்கள் எப்படி படமெடுக்கலாம்? அவர்களிடம் அவ்வளவு பணம் எப்படி என பலர் சாடுகின்றார்கள்


அதாவது அது ஊழல்பணமாம், கண்டுபிடித்துவிட்டார்களாம்


ஏவிஎம் செட்டியார் கொடிகட்டிபறந்த காலத்திலே மேகலா பிக்சர்ஸ், பூம்புகார் புரடக்சன் என சினிமா தயாரிப்பு கம்பெனி நடத்தியவர் அவர்கள் தாத்தா கலைஞர்




அன்றே கார் வைத்திருந்த ஒரே எழுத்தாளர், வசனகர்த்த்தா அவர்தான்


சிவாஜியும், எம்ஜிஆரும் வாய்ப்புக்கு அலைந்த காலங்களிலேயே கலைஞர் நிலையான இடம்பிடித்து எங்கோ போயிருந்தார்..
அவர் சம்பாதித்தது ஏராளம்


அவரின் பேரன்கள் வந்து சினிமா எடுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை


எஸ் எஸ் வாசன் உருவாக்கிய சாம்ராஜ்யம் பத்திரிகையில் தொடர்கின்றது, ஜெமினி சினிமா என அவர் தொடங்கிய கம்பெனி பின்னர் நிறுத்தபட்டது


ஆனால் மேகலா பிக்சர்ஸ் இன்று வேறு பெயரில் தொடர்ந்து இயங்குகின்றது.


வறுமையான எஸ் எஸ் வாசன், பத்திரிகையிலும் சினிமாவிலும் சாம்ராஜ்யம் உருவாக்கலாம், அவர் பிராமணன் அல்லவா பிரச்சினை இல்லை


ஆனால் தாழ்த்தபட்டவன் ஒன்றை உருவாக்கினால் அது முழுக்க ஊழல், திருட்டுபணம்


இது இந்திய தர்மம்


அதாவது செட்டியார், எஸ் எஸ் வாசன் போன்ற தாத்தாக்களுக்கு வந்த பேரன்கள் அதே தொழில் செய்யலாம் கேட்கமாட்டார்கள்.


ஆனால் அதே காலத்தில் அவர்களுக்கு சமமாக‌ சினிமா தொழில் செய்த கலைஞரின் பேரன்கள் படமெடுத்தால் இவர்களிடம் கணக்கு காட்டி சர்டிபிக்கேட் வாங்கவேண்டுமாம்...



No comments:

Post a Comment