Thursday, March 23, 2017

ஜிடி நாயுடு நிச்சயமாக தமிழகத்து எடிசன்..

https://youtu.be/6IKMDA-hMd4


விஞ்ஞானிகள் பலவகை ஒவ்வொருவரும் ஒருவகை


ஒரு கூட்டம் சிந்தித்து தியர் எழுதிகொண்டே இருக்கும், நியூட்டன், ஐன்ஸ்டீன் அவ்வகை


இன்னொரு கூட்டம் சிந்தித்து செயலபடுத்தி ஒரு பொருளை உருவாக்கி மக்களுக்கு பயனுற கொடுத்து சம்பாத்தித்துகொண்டிருக்கும்


எடிசன் போன்றோர் அவ்வகை


தமிழகத்தில் முதல்வரிசையில் இடம்பெறுவது சீனிவாச ராமானுஜம் என்றால் இரண்டாம் வரிசை ஜி.டி நாயுடு


கோபால்சாமி துரைச்சாமி நாயுடு, சுருக்கமாக ஜி.டி நாயுடு.படிக்காத மேதைகள் நிறைந்த தமிழகத்தில், பாமர விஞ்ஞானி அவர்.


எடிசனுக்கும்,ஹென்றிபோர்டுக்கும் ஏன் ஜெர்மானிய பென்சுக்கும், ஜப்பானியரான ஜெனிச்சி கவாகாமி போன்றோருக்கும் சவால் விட்ட தமிழன், ஒரே தமிழன்.


தொழில்துறை, விவசாயம், வியாபாரம், விஞ்ஞானம் என மொத்தமும் கலக்கி எடுத்து அனைத்திலும் டாப்1 என நின்று சாதித்த தமிழன்.


அந்த வரிசையில் இனி ஒரு தமிழன் வருவதற்கு நிச்சயம் 500 ஆண்டு ஆகும்.


எப்படி சாதித்தான், அவனால் மட்டும் எப்படி முடிந்தது?. எவ்வளவு அடிச்சுவடுகளிலும் உதவியிலும் எடிசனும், போர்டும் சாதித்த சாதனைகளை, சுயம்பாக வளர்ந்த அந்த தமிழனால் எட்ட முடிந்தது பெரும் ஆச்சரியம்


பொறியியல் தொழில்துறைக்கு இன்றுவரை புரியாத புதிர் அவர், பள்ளிபடிப்பு இரு விரல்களுக்குள் அடங்கிவிடும் அவ்வளவுதான்.


இன்று எத்தனை பொறியியல் கல்லூரி, எவ்வளவு பட்டம், எவ்வளவு உயர்படிப்புகள், ஆனாலும் ஒரு நாயுடுவை, அதிலும் அவரின் ஆற்றலில் ஆயிரத்தில் ஒருபங்குள்ள ஒரு பொறியிலலாளரை இன்று உருவாக்கமுடியுமா?


முடியாது இன்றுள்ள ஆயிரகணக்கான தமிழக பொறியியல் பல்கலைகழகங்களாலும் முடியவில்லை, முடியவும் முடியாது.


அறிவு வேறு, திறமை வேறு, சுயசிந்தனை வேறு.


உப்பினை கூட வரிபோட்டு கொள்ளையடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை பழிவாங்கிற்று, பெரும் வரி கட்ட சொல்லி அவரை அடித்தது, அதாவது விட்டால் ஐரோப்பிய எந்திரங்களை இவனே செய்துவிடுவான், நாமெல்லாம் வியாபாரம் செய்யமுடியாது என குறித்துவைத்து அடித்தது.


வெறுப்பில் தன் கண்டுபிடிப்புகளை எல்லாம் தீயிலிட்டு கொளுத்தி மனம் வெறுத்தார் நாயுடு


சுதந்திரம் பெற்றபின்னும் காங்கிரஸ் அரசு வெளிநாட்டவருக்கு அஞ்சி அவரை அடக்கித்தான் வைத்திருந்தது, அவரை ஊக்குவிக்கவே இல்லை


எப்படி நேதாஜியினை வெள்ளையனுக்காக கைவிட்டார்களோ, அப்படியே கைவிடபட்டவர்தான் நாயுடு


அறிவாளி என்பதற்காக வெள்ளையனாலும், சொந்தநாட்டு மக்களாலும் ஒதுக்கிவைக்கபட்ட மாமனிதர், ஒருவகையில் இந்தியா அவருக்கு இழைத்தது பெரும் துரோகம்..


முன்பு ஜெர்மனும், அமெரிக்காவும் அவரிடம் பெற்ற நுட்பங்கள் ஏராளம், அவற்றைத்தான் நாம் பெரும் பணம் கொடுத்து இன்று வாங்குகின்றோம்.


அறிவில் சிறந்த பாரதியும், கணித விஞ்ஞானி ராமானுஜமும் அழுது கரைந்து, வேதனையில் செத்த இந்த நாட்டில்தான் அந்த மாபெரும் விஞ்ஞான அவதாரமான ஜி.டி நாயுடுவும் வேதனையில் செத்தார்.


சக தமிழர்கள் அன்று இவருக்கு ஒத்துழைத்தால், அதாவது பிரிட்டிசாரை எதிர்த்து ஆதரவளித்திருந்தால் இன்று இந்தியா எவ்வளவு பெரிய தொழில்புரட்சியை கண்டிருக்கும்???


இந்நாட்டில் என்றுமே அறிவாளிக்கு மரியாதை இல்லை என்பதற்கு பெரும் எடுத்துகாட்டி ஜிடி நாயுடு.


மோட்டார் முதல் அவரைக்காய் செடிவரை அவரின் சாதனை பெரிது, அரசையும் மீறி அவர் செய்த தொழில்பெரிது.


அதற்கும் மேல் கொட்டிய செல்வத்தை கல்விக்கும், ஆராய்சிக்கும் அள்ளிகொடுத்த அவரின் மனம் பெரிது.


அவர் எவ்வளவு பெரிய அறிவாளி என்பதற்கு ஒரு உதாரணம் மட்டும் எடுத்துகொள்ளலாம்.


அதாவது உலகம் கண்ட ஒப்பற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இறந்தபின் அவரின் மூளையை ஆராய்சி செய்தார்கள், அதில் சில மடிப்புகள் அதிகம் இருந்ததாகவும் அவரின் சிந்தனை திறனுக்கு அதுதான் காரணம் என ஒரு முடிவிற்கு வந்தார்கள்.


அதே போல மேல்நாட்டு விஞ்ஞானிகள் ஆராய விரும்பிய மூளை, தமிழக டாப்1 விஞ்ஞானி ஜி.டி நாயுடுவினது, அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம்.


இதற்குமேலும் அவரைபற்றி விளக்க என்ன இருக்கின்றது.


தொழில்புரட்சியில் ஒரு விஞ்ஞான மேதையாக ஒப்பற்று விளங்கிய அந்த தமிழனின் பிறந்தநாள் இன்று


அந்த பெரும் விஞ்ஞான வித்தகனுக்கு இங்கு பெரும் நினைவு மண்டபம் கிடையாது, அவனுக்கு சிறப்பு கிடையாது


ஆனால் ராமசந்திரனுக்கும், ஜெயலலிதாவிற்கும் பெரும் கொண்டாட்டம் உண்டு, உருபடுமா மாநிலம்


நிச்சயமாக ஜிடிநாயுடுவின் பிறந்தநாள் தமிழக மாணவர்களிடையே அறிவியல் நாளாக கொண்டாடபட வேண்டும்.


மாணவர்களின் புதுபுது கண்டுபிடிப்புகள் அன்று காட்சிக்கு வைக்கபடவேண்டும், அவர் பெயரால் பெரும் விருதுகள் வழங்கபட வேண்டும்.


நமக்கு தேவை சின்ன எம்ஜிஆர், டவுசர் எம்ஜிஆர், ஜெயில் எம்ஜிஆர் அல்ல, மாறாக ஜிடிநாயுடுக்கள், அப்துல் கலாம்கள்.


அவர்களை இப்படித்தான் உருவாக்க முடியும்...


இவர்களை போன்றவர்களை யார் நினைக்கின்றார்களோ இல்லையோ, அந்த அபூர்வ தமிழனை நாம் நினைத்துகொள்ளலாம்


ஜிடி நாயுடு நிச்சயமாக தமிழகத்து எடிசன்..




 

No comments:

Post a Comment