டெல்லியில் தமிழக விவசாயிகளை சந்தித்த வைகோ, அவர்களின் கோரிக்கையையினை அருண் ஜெட்லியிடம் சமர்பித்தார்
சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்று, அங்கே சுள்ளி பொறுக்கிகொண்டிருந்த கனிமொழியினால் காப்பாற்றபட்டவர் இந்த வைகோ
தினகரனின் மாட்டுவண்டியில்தால் பழனிச்சாமி எனும் விவசாயி இவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.
இதற்கு களை பறித்துகொண்டிருந்த தமிழிசை எனும் விவசாயியும், வரப்பு வெட்டிகொண்டிருந்த ஸ்டாலின் எனும் விவசாயியும் சாட்சிகள்..
அதனால்தான் கனிமொழி தஞ்சாவூர் பக்கமெல்லாம் வசூல் செய்து டெல்லிக்கு சென்று போராடும் விவசாயிகளுக்கு ஆறுதல் சொன்னார், செத்து தொலைத்துவிட கூடாது அல்லவா?
உயிர்பிழைத்த கோப்பால் சாமியும் இப்பொழுது சென்றிருக்கின்றார், கொஞ்சம் ஆங்கில பேசும் விவசாயி அல்லவா? அதனால் நிதியமைச்சரையும் சந்தித்துவிட்டார்...
இவர்களை எல்லாம்.................
ஏன் மிஸ்டர் வைகோ? போராடும் விவசாயிகளுக்கு அவர்கள் கோரிக்கைகளை வைக்க தெரியாதா?
அங்கும் புரோக்கராக சென்று தொழில் பக்தியினை காட்டத்தான் வேண்டுமா?
No comments:
Post a Comment