Thursday, December 22, 2016

சசிகலாவுடன் பல்கலைகழக துணைவேந்தர்கள் சந்திப்பு இன்னும் பல...



சசிகலாவுடன் பல்கலைகழக துணைவேந்தர்கள் சந்திப்பு


எதற்கு? சசிகலா பெயரில் ஆய்வரிக்கைகள் எழுதி அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கவா?


அல்லது மன்னார்குடியில் "சின்னம்மா" பல்கலைகழகம் தொடங்கவா?





இவர்களே இப்படி என்றால், அந்த பல்கலைகழகங்கள் உருப்படும்??

விட்டால் சின்னம்மா அரசியல் என ஒரு பாடபிரிவினையே தொடங்கிவிடுவார்கள் போல‌

இந்த துணைவேர்ந்தர்களுக்கும் அந்த பேனர் வைக்கும் ஸ்டிக்கர் பாய்ஸுக்கும் என்ன வித்தியாசம்?

இந்த துணைவேந்தர்களுக்கு செக் வைப்பதற்காகவே தமிழக ஆளுநராக அந்த சுப்பிரமணியன் சாமியினை நியமித்து தொலையுங்கள்.















 கொசுறு






சசிகலாவை பல மொழிகள் கற்றுக்கொள்ள வைத்தார் ஜெயலலிதா @ தந்தி டிவி.

சரி ஏதாவது ஒரு மொழியில் முதலில் அவரை பேச வையுங்கள் பார்க்கலாம்.

ஜெயா அஞ்சலி அன்று மத்திய அமைச்சர்களுடன் அவர் "சொல்லாமலே" லிவிங்ஸ்டன் ஸ்டைலில் சைகை மொழியில் தான் பேசிகொண்டிருந்தார்








வீரப்பனின் கூட்டாளி ஏழு வருடத்திற்கு பின் கைதுஎல்லைச்சாமி வீரப்பனின் கூட்டாளி ஒரு தமிழ்முதல்வர் ஆட்சியில் கைதுசெய்யபடுவதா? இது எவ்வளவு பெரிய தமிழின துரோகம்?


தமிழக எல்லையினை காக்க வீரப்பனோடு போரிட்ட, காவேரி காத்த‌ இந்த தியாகியினை கைது செய்ய, இந்த பன்னீர்செல்வம் அரசுக்கு எவ்வளவு தைரியம்?




இப்படி எல்லாம் இந்த அங்கிள் கோஷ்டி முஷ்டி முழக்கும் என்றால் ஒன்றுமே இல்லை


ஏன் அங்கிள் பாய்ஸ்?


சின்னம்மா என ஒருவர் கிளம்பும் போது நீங்கள் ஏன் வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமியினை "சந்தண அம்மா" அல்லது "வனத்து அம்மா" என சொல்லி அரசியலுக்கு அழைத்து வர கூடாது?






ராமமோகன ராவ் விவகாரத்தில் ஓ.பி.எஸ். கருத்து தெரிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: ஸ்டாலின்


வாய்யா வா..இப்பொழுதுதான் நீர் கலைஞரின் மகன், இப்படித்தான் கேட்கவேண்டும்


வாய் திறந்தாலும் திறக்காவிட்டாலும் பன்னீர் சிக்கிகொள்வார்
















No comments:

Post a Comment