Thursday, December 15, 2016

ஜெயலலிதா யாருக்கோ உயில் எழுதியுள்ளாராம்..

ஜெயலலிதா யாருக்கோ உயில் எழுதி வைத்திருக்கின்றாராம், சம்பந்தபட்ட நபர் சென்று தன் அடையாளங்களை எல்லாம் சொன்னால் உடனே சொத்துக்கள் கிடைத்துவிடுமாம், இப்படி ஒரு செய்தி வருகின்றது


இப்பொழுது என்ன நடக்கும்? சம்பந்தபட்டவர் சென்று தன் அடையாளத்தை உறுதி செய்தால்தானே வாரிசு ஆகும்? அப்படி ஒரு ஆள் இல்லை என்றால், சரி அப்படி ஒருவர் இருந்து என் சொத்துக்களை எல்லாம் முத்து ரஜினியாக கட்சிக்கு தாரை வார்க்கின்றேன் என சொல்லிவிட்டு காவி உடுத்தினால்?


எதுவும் நடக்கலாம், செய்தி உண்மையானால், ஜெயா சொத்தின் வாரிசு யார் என பார்க்கலாம்.




அக்கட்சியின் நிறுவணர் எம்ஜிஆர் இரட்டை குதிரையில் சவாரி செய்தவர். சினிமா, அரசியல் என இரண்டையும் கையில் வைத்திருந்தார்


அரசியல் வாரிசு யார் என அவர் அண்ணா சமாதி அருகே புதைக்கபடும்பொழுதும் எழும்பி சொல்லவே இல்லை


ஆனால் கலையுலக வாரிசு பாக்யராஜ் என அறிவித்தார். எப்படி? என்பதுதான் குழப்பம்


எம்ஜிஆர் அதிரடி, ஹீரோயிச நடிகர், பாக்ய்ராஜ் என்பவர் ஜெமினி கணேசன், முத்துராமன் வகை நடிகர்.


பாக்யராஜ் பெரும் கதாசிரியர் என்பது உலகறிந்தது, எம்ஜிஆர் எத்தனை பேர் கதைய்னினை தனக்காக மாற்றிகொண்டார் என்பது ஆர்.எம் வீரப்பனுக்கே வெளிச்சம்


பின் எப்படி பாக்யராஜ் கலையுலக‌ வாரிசனார்? புரியாது. அண்ணாயிசத்தில் அது ஒரு வகை


உண்மையில் எம்ஜிஆரின் கலையுலக வாரிசு யார் என்ற குழப்பம் எல்லோர் போல எமக்கும் உண்டு.


பவர் ஸ்டாரின் படங்களை பார்க்கும்பொழுது அது இன்னும் அதிகமாகின்றது


எம்ஜிஆராவது தன் கலையுலக வாரிசு என ஒருவரை சொல்லியாவது சென்றார், ஜெயலலிதாவின் திரையுலக வாரிசு யார்?


அதுவும் மகா மர்மம்.



No comments:

Post a Comment