Friday, December 30, 2016

கடவுளே "சின்னமாவிற்கு பேச்சு கொடு" என்ற கோஷம் இனி தமிழகமெல்லாம் ஒலிக்கும்

மறுபடியும் அடிமைகள் மண்சோறு, அலகு குத்துதல், காவடி எடுத்தல், தீ மிதித்தல் போன்ற பக்திகளில் மூழ்க வாய்பிருக்கின்றது


எதற்கு?


பொதுகுழு எனும் பட்டத்து யானை மாலை சூட்டிய பின்னும் சின்ன அம்மாவிற்கு பேச்சு வரவில்லை என்றால் என்ன செய்ய?




அதுதான் வழி, விரைவில் பால்குடம் எடுக்க கிளம்புவார்கள்


சின்னமாவிற்கும் ஆலோசனை கொடுப்பார்கள்


சின்னம்மாவும் சரஸ்வதி சபதம் சிவாஜி கணேசனாக இப்பொழுது தெய்வத்திடம் முறையிட்டு கொண்டிருப்பார்


இனி அந்த தெய்வமே வந்து "செல்வம், கல்வி,கட்சி மக்கள் செல்வாக்கு என்பதை விட நட்பே பெரிதென்று நிரூபி,


எல்லாவற்றையும் நட்பில் அடிமையாக்கு, நட்பே பெரிது என்பது உன்னால் உலகெல்லாம் விளங்கட்டும்" என ஆசீர்வதிக்கும்,


பின் சின்னம்மா "அம்மா, அப்பா, எம்ஜிஆர், ஜெயா, நடராஜன், கட்சி, ஆட்சி, பொதுசெயலாளர், பன்னீர், முதல்வர்" என சரஸ்வதி சபதம் சிவாஜி போலவே ஒவ்வொரு வார்த்தையாக படிப்பார்


அனைத்தும் வந்துவிட்டது, அனைத்து வந்துவிட்டது என மகிழ்ந்து ஜெயா படத்தின் முன்பு வந்து


"அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
எம்ஜிஆர், ஜெயா முதல் என்றே புரிய வைத்தாய் தேவி
கட்சி, ஆட்சி , போயஸ் தீபம் ஏற்றிவைத்தாய் நீயே
நடராஜன் நெஞ்சினை குளிரவைத்தாய் தாயே"


என பாடிவிட்டு பத்திரிகையாளரை சந்திக்க வருவார்


இப்படி நடக்க‌ அடிமைகள் மறுபடியும் கோயில் கோயிலாக சென்று உருளவேண்டும்.


ஆக அடிமைகள் மறுபடியும் ஆலய அழிச்சாட்டியம் செய்யும் காலம் வந்தே விட்டது


கடவுளே "சின்னமாவிற்கு பேச்சு கொடு" என்ற கோஷம் இனி தமிழகமெல்லாம் ஒலிக்கும்.







சீமான் கும்பல் வரிசையோடு சின்னம்மா ஆதரவாளர்களும் சேர்ந்துவிட்டார்கள்

சீமான் என்பவர் பேசியே கொன்றார்

சின்னம்மா பேசாமலே கொல்கின்றது


அது என்னமோ சி என்றாலும் சீ என்றாலும் நமக்கு சீசீ என்று சிக்கலாகவே அமைகின்றது.




 


No comments:

Post a Comment