Friday, December 16, 2016

தமிழகத்தை மிக கவனமாக கவனித்துகொண்டிருப்பது சிங்களர்கள்





தமிழகத்தை யார் கவனிப்பார்களோ இல்லையோ, மிக கவனமாக கவனித்துகொண்டிருப்பது சிங்களர்கள்


அடிக்கடி தமிழக அரசியலை வாருவார்கள், கலாய்ப்பார்கள். காரணம் தங்கள் நாட்டில் தீவிரவாதத்தை தமிழகம்தான் வளர்த்துவிட்டது என்ற வன்மம் அவர்கள் மனதில் எந்நாளும் உண்டு


போரின் போது, முன்பு ராணுவ தளபதி தமிழக ஈழ அரசியல்வாதிகள் பெரும் கோமாளிகள் என சொன்னது நினைவிருக்கலாம்.





ஜெயாவின் மரணத்திற்கு ராஜபக்சே பெரும் இரங்கல் அறிக்கை தெரிவித்திருந்தார், சீமான் கடும் துக்கத்தில் இருந்ததால் ஈழதாய்க்கு அவர் அஞ்சலி செலுத்தியதை கண்டுகொள்ளவில்லை

இப்போது எப்படி கலாய்க்கின்றார்கள் தெரியுமா?

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருக்கு எழுத வேண்டிய கடித்தத்தை சிங்கள அமைச்சர் சின்ன அம்மாவிற்கு எழுதி தொலைத்துவிட்டார்

அது எப்படி ஆட்சியில் இல்லாத ஒருவருக்கு இன்னொரு நாட்டின் அமைச்சர் கடிதம் எழுதமுடியும் என ராஜதந்திர சிக்கல் எழுகின்றது

இங்கோ சின்ன அம்மையாரின் சிங்கங்கள் "எப்படி பார்த்தாயா? சின்னமாவின் அருமை சிங்களனுக்கே சிலிர்க்க வைத்துவிட்டது" என பராக்கிரமம் பேசுகின்றார்கள்

ஆனால் உண்மையில் சிங்களன் செய்திருப்பது மகா கிண்டல்

அதாவது எல்லோரும் சென்று தமிழகத்தில் அவர் காலில்தானே விழுகின்றார்கள், நாங்களும் கலாய்க்கின்றோம் என கலாய்த்திருக்கின்றார்

இனியும் தமிழன் அசிங்கபட என்ன இருக்கின்றது?

அங்கிள் சைமன், உங்களுக்கு கூட கடிதம் எழுதாமல் சின்னம்மாவிற்கு சிங்களன் கடிதம் எழுதியிருக்கின்றான் என்றால் என்ன அர்த்தம்?

பழனி முப்பாட்டன் சந்நிதியில் நீங்கள் ஒரு மொட்டை போட்டுகொள்வது நல்லது.








No comments:

Post a Comment