Thursday, December 15, 2016

ஜெ மறைவிற்குப் பிறகு அரசியல் மாற்றங்கள்...




தமிழகத்தில் எந்த பொறுப்பிலுமே இல்லாத, எம் எல் ஏவினை விடுங்கள், ஒரு வார்டு கவுன்சிலர் பதவியில் கூட இல்லாத கட்சியின் வைகோ பிரதமரை சந்திக்கின்றார்


சந்தித்து புயல்சேதம், ஜல்லிகட்டு, ராமேஸ்வர மீணவர் பிரச்சினை என பல கோரிக்கைகளை வைக்கின்றார்


இந்த கோரிக்கைகளைத்தான் அவர் கோரினார் என சொல்வார்கள் அதனை நாம் அப்படியே நம்ப வேண்டும்





சரி இவ்வளவு நாளும் வைகோ எங்கிருந்தார்?

கடந்த 6 மாதமாக‌ வைகோ வானத்தில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்தார், இன்று அதிகாலையில்தான் ரஷ்ய ராக்கெட் மூலம் பசிபிக் கடலில் இறங்கினார், இந்தியா வந்தவுடன் தமிழர் நலம் பற்றி பேசிவிட்டார்

பொதுவாக‌ புரோக்கராக இருந்து, நெளிவு சுழிவு கற்று கட்சி ஆரம்பிப்பார்கள், உலகிலே கட்சி ஆரம்பித்த பின் புரோக்கரான ஒரே நபர் கோப்பால் சாமிதான்

இறுதிபோரில் இவரை நம்பிய பாவத்திற்காக பிரபாகரன் தன் தலையில் தானே கோடாரியால் கொத்தி செத்த சாத்தியமும் இருக்கலாம்,









தமிழக அரசியலை விளங்கசெய்ய இதனை விட அரிய சந்தர்ப்பம் வாய்க்காது


அதாவது ஒரே அரசியல், கலைஞரின் திமுக ஒருபுறம், அவரை பிடிக்காதவர்கள் எல்லாம் இன்னொருபுறம்


இதில்தான் எம்ஜிஆர் அதிமுக,ஜெயா அதிமுக, மதிகெட்ட திமுக, தேறா திமுக, இப்பொழுது சசிகலா திமுக வரை வந்து நிற்கின்றது




காங்கிரசும் திருநாவுக்கரசு வழியாக சசிகலா திமுக பக்கம் திரும்புகின்றது, பாஜக நிலை சசிகலாவிடம் மோடி காட்டிய பரிவில் வெளிபட்டது


கம்யூனிஸ்டுகள் இன்று சசிகலாவிடம் குனிந்து நிற்பதும், சசிகலா பிடிக்கவில்லை என்றாலும் அதிமுக எம் எல் ஏக்கள் அய்யகோ நாம் உடைந்தால் கலைஞர் சிரிப்பாரே என அடங்கி இருப்பதும் அதே கலைஞர் எதிர்ப்பு


கருப்பு துண்டு புரோக்கர் டெல்லியில் சென்று மோடியிடம் மண்டியிட்டு நிற்பதும் அதே கலைஞர் எதிர்ப்பே


ஆக எதிர்கட்சிகளை சேர்த்துநிற்க தமிழகத்தில் ஒரே காரணம் அந்த கலைஞர் எதிர்ப்பு, அவரை காட்டியே இன்று வரை அரசியல் நடக்கின்றது


அதில் கொள்கையோ மக்கள் நலனோ ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, ஒரே நோக்கம் கலைஞர் எதிர்ப்பு


கொஞ்சபேர் சொல்கின்றான் பாஜக அதிமுகவினை விழுங்குமாம், அட பதர்களா? டெல்லியின் இன்னொரு கிளைதான் அதிமுக, அந்நாளிலிருந்தே அது அப்படித்தான், பின்னர் ஏன் விழுங்க வேண்டும்


ஆனாலும் இத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் இத்தனை ஆண்டு காலம் கட்சியினை கொண்டுசென்றது கலைஞரின் சாமார்த்தியம் அன்றி வேறல்ல, நிச்சயம் அல்ல‌


அதனால் உறுதியாக சொல்லலாம், கலைஞர் இல்லையேல் அவர்கள் அரசியல் இல்லை


ராமச்சந்திரனோ, ஜெயலலிதாவோ, யார் செத்தாலும் கலைஞர் இருக்கும் வரை ஒரு கூட்டத்தை அவரை எதிர்க்கின்றோம் என சொல்லி கூட்ட முடிகின்றது.


அதனால்தான் திமுக தொண்டனை விட, கலைஞர் நீண்டகாலம் வாழவேண்டும் என ஆசைபடுபவன் எதிர்கட்சியில்தான் இருக்கின்றான், மனதிற்குள் அவர்கள் வேண்டும் வேண்டுதல் பலிக்கின்றது


ஆக மாற்றுகட்சி நண்பர்களே, உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி, இன்னும் நன்றாக பிரார்த்தியுங்கள்.








No comments:

Post a Comment