Sunday, December 25, 2016

கிறிஸ்துமஸ் நாளில் தலைவர்கள்...




கிறிஸ்துமஸ் விழாவில் முக.ஸ்டாலின் பங்கேற்பு


பக்ரீத், ரமான் சாய்பாபா, கிறிஸ்மஸ் வாழ்த்து என பகுத்தறிவிலிருந்து விலகிகொண்டே சென்ற திமுக விரைவில் கடவுள் ஏற்பு கொள்கைக்கு சாயலாம்


இந்து மத பண்டிகைகளில் மட்டும் திமுகவினர் வாய்திறக்க மாட்டார்கள், என்ன சொல்லி சமாளிக்கலாம்?





திராவிடநாடு கோரிக்கையினை காலம்பார்த்து கழற்றிவிட்டதை போல இந்த பகுத்தறிவு இம்சைகளையும் கழற்றிவிடலாம்

எப்படி? அண்ணா காட்டிய வழியில்

"திராவிட நாட்டு கொள்கையினை கைவிடுகின்றோமே தவிர, அதற்கான காரணம் அப்படியே இருக்கின்றது" என்றார் அண்ணா,

அப்படியே "இந்துமத நண்பர்களுக்கு எங்கள் தீபாவளி, சதுர்த்தி, கார்த்திகை வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம், ஆனால் எந்த காரணத்திற்காக இந்து கடவுள்கள் இல்லை என சொன்னோமோ அந்த காரணம் அப்படியே இருக்கின்றது: என சொல்லி பக்தி ஜோதியில் கலந்துவிடலாம்

காலத்திற்கு ஏற்றபடி வாழ்க்கை முறையும், உலகமும் மாறும்பொழுது கட்சிகளும், இயக்கங்களும் மாறுவதில் தவறில்லை

காலத்திற்கு மாறாத எதுவும் நிலைத்து நிற்காது

அப்படி திமுக மாறினாலும் அது பெரும் தவறு ஆகாது

ஆனான ரஷ்யாவிலே தேவாலயங்கள் சீரமைக்கபட்டு கிறிஸ்துமஸ் கோலகலமாக கொண்டாடபடவில்லையா?









தற்போதைய சூழ்நிலையில் திராவிட இயக்கங்கள் எழுச்சி பெறுவது மிகவும் அவசியம்; தா.பாண்டியன்

இதனை சொல்லவேண்டியது கலைஞரை பார்த்த பின்பா? அல்லது சசிகலாவினை சந்தித்த பின்பா?

சசிகலாவினை சந்தித்துவிட்டு திராவிட இயக்கம் எழுச்சி பெற வேண்டும் என்பதை விட இந்த ஆண்டின் பெரும் காமெடி எதுவாக இருக்க முடியும்?


தா.பாண்டியன் இப்பொழுது ச்சீசீ.பாண்டியன்









சிகிச்சைக்கு சென்றிருந்தாலும் தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

ராம் மோகன் ராவினை குறித்து மறைமுகமாக தமிழிசை இப்படி சொல்லியிருக்கலாம் என்பது சொல்லிதெரியவேண்டியதில்லை, சரி மேடம் தவறு செய்தவர்கள் எந்த சிகிச்சைக்கு சென்றாலும் தப்ப முடியாது என்பது சரி

ஆனால் இதனையே "அந்த 75 நாட்கள்" நடக்கும்பொழுது சொல்லியிருக்கலாம் அல்லவா?




No comments:

Post a Comment