Saturday, December 17, 2016

வைகோ திமுக தொண்டர்களால் விரட்டப்ட்டார்..

https://youtu.be/1DLAmPCwihA




கலைஞரை நலம் விசாரிக்க சென்ற் வைகோ திமுக தொண்டர்களால் விரட்டபட்டார்

கலைஞருடன் இருந்து வளர்ந்து பின் அவருக்கே பாடம் கற்பிட்த்த பலபேரில் வைகோவும் ஒருவர், தொண்டர்களின் கோபம் நியாயமானது, ஆனால் அதற்காக செய்திருக்கும் காரியம் கொஞ்சமும் நியாமில்லாதது.

உடல்நலம் இழந்த தன் முன்னாள் தலைவரை காணவந்த ஒருவரிடம் அமைதி காத்திருக்கலாம், ஒருவேளை கலைஞரை சந்தித்திருந்தால், கலைஞரால் பேசமுடிந்தால் என்ன கேட்டிருப்பார்??

"வாய்யா, இப்பொழுதுதான் சசிகலா அனுப்பியதாக செங்கோட்டையன், தம்பிதுரை எல்லோரும் வந்தார்கள், நீ ஏன் அவர்களோடு வரவில்லை

உங்கள் தலைவி சசிகலா நலமா?,

போகிற வழியில் விஜயகாந்தினை சந்தித்து என்னை வந்து பார்க்க சொல்வாயா?"

இதற்கு மேலுமா தொண்டர்களின் செருப்படி வலித்துவிடும்??
அவமானம் கொடுத்துவிடும்?

இந்த தொண்டர்களின் செயலுக்கு மு.க ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம், அப்படி சொல்லிகொள்கின்றார்

முன்பு குஷ்பூ வீட்டினை திமுகவினர் நொறுக்கும் பொழுது மவுனம் காத்த அதே ஸ்டாலின், இப்பொழுது வருத்தமும் தொண்டர்கள் மேல் கண்டனமும் தெரிவிக்கின்றாராம்

இன்று கண்டனம் தெரிவிக்கும் மு.க ஸ்டாலின் குஷ்பூ தாக்கபடும்பொழுது ஒரு வருத்தமும் தெரிவிக்கவில்லை என்பது கோடான கோடி குஷ்பூ ரசிகர்களின் பெரும் வருத்தம்.

இந்த தொண்டர்கள் முன்பு சசிகலாவினை ராசாத்தி அம்மாள் சந்தித்தபொழுது என்ன செய்தார்கள்? என்பதுதான் தெரியவில்லை





கொசுறு






கருப்பு பண ஒழிப்பின் பலனை விரைவில் அடைவோம் : பியூஷ் கோயல்

கறுப்பு பணத்தை ஒழிப்போம் என கிளம்பி, மொத்த பணத்தையும் ஒழித்த பலன் ஏடிஎம் மையங்களில் நன்றாக தெரிகின்றதே, இன்னும் தெரிய என்ன இருக்கின்றது?





No comments:

Post a Comment