Thursday, December 22, 2016

கரினா கபூர் தைமூர் என்பவன் பெயரினை ஏன் இட்டார்?





நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் போதாதென்றால் புதிதாக ஒரு பிரச்சினையினை கிளப்புகின்றார்கள்


அதாவது அவர் பெற்ற மகனுக்கு தைமூர் என பெயரிட்டுவிட்டாராம்


முன்பு தைமூர் என்றொரு உஸ்பெக்கிஸ்தான் மன்னர் இருந்தார், எல்லோரையும் போல இந்தியா மீது படையெடுத்தான், டெல்லியினை அழித்து மண்டையோட்டிலே பிரமிடு அமைத்து விளையாடினான்





இந்தியாவினை ஆளவில்லை, கொள்ளையடித்து திரும்ப உஸ்பெக் திரும்பினான்

பெரும் காட்டுமிராண்டி மன்னன், எல்லோரையும் போலத்தான் இந்தியா மீது படையெடுத்தான், ஆனால் இஸ்லாமாக போய்விட்டான், போதாதா?

இவரின் ஏதோ ஒரு மகாராணிக்கோ அல்லது தோழிக்கோ பிறந்த வம்சத்தில் வந்தவர்தான் பாபர், அதே மொகலாய நிறுவணர் பாபர், மசூதி கட்டிவைத்து பின்னாளில் பாஜகவினை அரியணை ஏற்றிய அந்த பாபர்

இப்பொழுது கரினா கபூர் அந்த தைமூர் என்பவன் பெயரினை ஏன் இட்டார்? அவர் இந்திய எதிரி, இது அவமானம் என பொங்கி சீறுகின்றனர், விஷயம் பரபரப்பாகின்றது

கரினாவிற்கு திருமணம் முடிந்ததெ பெரிய விஷயம், இதில் அவர் குழந்தை பெற்றது அடுத்த அதிர்ச்சி, இப்பொழுது குழந்தையின் பெயரும் பரபரப்பாம்

சரி தைமூர் என்ற பெயர் சர்ச்சை என்றால், வெள்ளையர்கள் பெயரும் சர்ச்சை ஆகவேண்டுமல்லவா?

இந்தியாவில் ரத்த ஆறு ஓட வைத்து ஆங்கில ஆட்சிக்கு வழிகோலினான் ராபர்ட் கிளைவ்

இன்று சோனியாவின் மருமகன் பெயர் ராபர்ட்

கரினாவிற்கு பொங்குபவர்கள் ராபர்ட் எனும் பெயருக்கும் பொங்கவேண்டும் அல்லவா? பொங்கியிருந்தால் ராபர்ட் எனும் பெயர் பரதவாஜ முனிவர் என மாற்றபட்டிருக்கலாம்

ராப்ர்ட் என பெயரிடபடும் ஊரில், தைமூர் பெயர் இருக்க கூடாதாம்

எப்படிபட்ட பிரச்சினையினை கிளப்பியிருக்கின்றார்கள்???








No comments:

Post a Comment