Wednesday, December 21, 2016

கலக்கிகொண்டிருக்கும் ரெய்டு செய்திகள்..

மத்திய அரசு செய்யும் சொத்துகுவிப்பு சோதனை எல்லாம் ஆரிய , பார்பாணிய இந்துத்வா சதியாம்


இதனை தமிழகம் பொங்கி கண்டிக்க வேண்டுமாம், இல்லையென்றால் ஆரியம் தமிழகத்தை அடிமைபடுத்திவிடுமாம் இப்படி எல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


யார் சொல்வது? சாட்சாத் சசிகலா ஆதரவாளர்கள. அப்படியானால் சசிகலா இல்லை என்றால் அதிமுக இருக்காதா? என்றால் சத்தியமாக என சிரிக்காமல் சொல்கின்றார்கள்.


அதிமுகவினை அழித்து பாஜக கால்பதிக்க துடிக்கின்றதாம், அதனால் ரைடு என கிளம்பிவிட்டதாம்


அதிமுக தமிழக அரசியலை விட்டு விலகிவிட்டால் கூட பாஜகவிற்கு ஒரு வோட்டு விழும்?


அட அந்த எம்ஜிஆரே எழுந்து வந்து சொன்னாலும் பாஜக பத்து சீட் வாங்கும்?


பின் நடப்பது என்ன?


பார்பணர்களால் உருவாக்கபட்ட கட்சி அதிமுக, பின்னாளில் பிராமண ஜெயா உருவாகி வரவும் அது வழிசெய்து கொடுத்தது


பார்பண தலமைகள் இல்லாத அதிமுகவினை பார்ப்பண மேலாதிக்கம் விட்டு வைக்காது, அதன் உருவாக்கம் அப்படி.


நாளையே ஒரு பார்ப்பண தலமை அதிமுகவிற்கு கிட்டட்டும், எல்லாம் சுபம்


இந்த தீபா பெயர் அடிபடுவதெல்லாம் அந்த சூழ்ச்சியே


சொல்லமுடியாது எஸ்வி சேகர் ஒரு பதவிக்கு வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை


இந்த கணக்குகளை புரிந்துகொள்ள மிக நுட்பமான பார்வை வேண்டும், சிலது புரியும் சிலது புரியாது


ஆக அதிமுக எனும் கட்சியினை அழியவிடமாட்டார்கள், ஆனால் கைபற்ற நினைப்பவர்களை விட்டுவைக்க மாட்டார்கள்


நிச்சயம் ஒரு ஆரியனையோ அல்லது ஆரிய நிரந்தர அடிவருடியினை தேடிகொண்டிருப்பார்கள், அது கிடைத்தவுடன் இந்த ரெய்டு, சோதனை எல்லாம் நிறைவடையும்


மன்னார்குடி கும்பல் அடியாளாக தொடர எந்த தடையும் விதிக்கமாட்டார்கள், ஆனால் அதிகாரத்தில் அமர விடமாட்டார்கள். ஏன் என்றால் அப்படித்தான்


இது எங்கோ இருந்து மிக திட்டமிட்டு செய்யபடும் காரியங்கள், பெரும் ராஜதந்திரங்கள்


எல்லாம் தானாக நடந்தது போல நடந்தாலும் உள்ளே ஒவ்வொன்றிற்கான காய் நகர்த்தலும் பிரமாண்ட மூளைகளால் தீட்டபடுபவை.


1970ல் இருந்து தொடரும் விளையாட்டு அது, அதன் தொடர்சியினைத்தான் பார்த்துகொண்டிருக்கின்றோம்


சரி இப்பக்கம் விளையாடுகின்றார்கள், அந்த பக்கம் அதனை அழிக்க என்ன முயற்சி?


கோப்பால் சாமி தெருவோரம் நிற்பதை கண்டபின் யாரும் தற்கொலை முயற்சிக்கு அங்கு தயாரில்லை, அணு அணுவாக தேரினை அடுத்த வாரிசுக்கு நகர்த்திவிட்டார் கலைஞர்.


இனி அவர் இல்லை என்றாலும் இம்மாதிரி சிக்கல் அங்கு வராது.


நிச்சயமாக சொல்லலாம், கலைஞர் அந்த சூழ்ச்சிகளை கடந்து இவ்வளவு தூரம் நிற்பதும், கட்சி கட்டுகோப்பாக இருப்பதும் பெரும் அதிசயங்கள்.


சரி அடுத்த ரைடு எங்கே என்பதுதான் தமிழகத்தின் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கேள்வி?


எங்கு இருக்கும்?


பன்னீர் உதவியாளரை கண் துடைப்பிற்கு விசாரிக்கின்றார்களாம், அடுத்து யாரையோ கண்விழி பிதுங்க விசாரிக்க போகின்றார்களாம், எல்லாம் நாடகம்


தங்களால் உருவாக்கபட்ட கட்சிக்கு தாங்கள் சொல்லும்படி அமரும் ஒருவன் கிடைக்கும் வரை, அவன் பதவி நிரந்தரம் ஆகும் வரை இந்த நாடகம் நடக்கும்.


நீ பொய் சொல்கின்றாய், ஆரிய தலமை எல்லாம் அதிமுக பிரச்சினை இல்லை என எம்மை நோக்கி சொல்வீர்களாயின்


அந்த பத்திரிகைக்கு வந்திருக்கும் திடீர் வீரத்தையும், ஆக்ரோஷத்தையும் பாருங்கள்


ஜெயா இருக்கும் வரை மவுனம் காத்த விகடன் குழுமம் இப்பொழுது சசிகலா நடராஜனின் வரலாற்றை உரித்து தொங்க விடுகின்றது


ஏன்? எதற்கு? எப்படி?


இதில் ஆயிரம் விஷயங்கள் ஒழிந்திருக்கின்றன, பொறுமையாய் கவனமாய் உற்றுநோக்கினால் ஏராளமான விஷயம் புரியும்


திடீரென முளைத்த தீபா


திடீரென சில பத்திரிகைகளுக்கு வரும் வீரம்


பன்னீர் காட்டும் பவ்யம், ஜெயலலிதாவே செல்ல மறுத்த டெல்லிக்கு அவர் ஓடும் ஓட்டம்


பல்டியும் மொட்டையும் அடிக்கும் அமைச்சர்கள்..


ஆளுநர் சு.சாமி எனும் அதிரடி செய்திகள்


அவ்வப்போது கிளம்பும் அப்பல்லோ மர்ம செய்திகள்..


கலக்கிகொண்டிருக்கும் ரெய்டு செய்திகள்..


எல்லாம் மர்மமாக ஏதோ சொல்லவில்லையா? கவனியுங்கள் காதோரம் சில உண்மைகளை சொல்லும்.

No comments:

Post a Comment