Thursday, December 29, 2016

இஸ்ரேலிய தலைவிதி அப்படி, தமிழக தலைவிதி இப்படி ...

பிரதமர் மீதான இரு ஊழல் வழக்குகளை விசாரிக்க இஸ்ரேல் அட்டார்னி ஜெனரல் உத்தரவு, பதவி இழக்கின்றார் பிரதமர் நேதன்யாகு


யாராக இருந்தாலும் வழக்கு என வந்துவிட்டால் கடாசி விடுகின்றார்கள் இஸ்ரேலில், முன்பு முன்னாள் பிரதமர் எகுத் ஒல்மர்ட்டும் சிறைக்கு அனுப்பபட்டார்.


இஸ்ரேலிய தலைவிதி அப்படி.


இங்கு தமிழகத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் பதவி ஏற்க அழைக்கின்றார்கள்


தமிழக தலைவிதி இப்படி


ஊழலை ஒரு பொருட்டாகவே தமிழகம் நினைக்கவில்லை,


மனதளவில் இன்னும் மன்னராட்சியாகவே அது ஜனநாயகத்தை அணுகுகின்றது,


இது மாறாது


பைத்தியகாரன் இருக்கும் ஊரில் நாமும் பைத்தியமாகவே இருந்துவிட வேண்டும், இல்லை என்றால் நம்மை கிறுக்கன் என்பார்கள்


சின்ன அம்மா வாழ்க, சின்ன அப்பா வாழ்க , சின்ன எம்ஜிஆர் பன்னீர் வாழ்க, சின்ன தாத்தா பொன்னையன் வாழ்க, சின்ன பாட்டி சரஸ்வதி வாழ்க , சின்ன பெரியப்பா தம்பிதுரை வாழ்க‌


இப்பொழுதுள்ள மில்லியன் டாலர் கேள்வி, சின்ன ஜெயலலிதா யார்?


விந்தியா, நமீதா என யார் அந்த இடத்திற்கு பொருத்தமானவரோ தெரியவில்லை


வருங்காலத்தில் உருவாக போகும் சின்ன ஜெயலலிதா இன்றே வாழ்க‌






திமுகவில் கணக்கு சரி இல்லை, அங்கு எல்லாமே ஊழல். தமிழகத்தை ஊழல்வாதிகளிடமிருந்தும் சுரண்டல்காரர்களிடமிருந்தும் காப்பாற்றவே தனிகட்சி தொடங்கினேன் என்றார் எம்ஜிஆர்


எப்படி தமிழகத்தை எம்ஜிஆர் காப்பாறி இருக்கின்றார் என்பது மிக நன்றாகவே தெரிகின்றது


ஒரு காலம் வரும் தமிழகத்திற்கு அவர் இழைத்திருக்கும் துரோகம் என்ன என்பதை பின்னாளில் வரலாறு சொல்லும்


அன்று எம்ஜிஆரின் கல்லறை கூட தமிழகத்தில் இருக்காது,







No comments:

Post a Comment