Monday, December 19, 2016

இந்த வைகோ விவகாரம்தான் என்ன?

முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் கோவில்பட்டி அருகே தேவர் சிலைக்கு மாலைபோட்ட தகறாறில் ஏதோ அடிபிடி சர்ச்சையாக உடனே எனக்கு பாதுகாப்பில்லை என சொல்லி தேர்தலில் இருந்து விலகினார் வைகோ


அப்படியே இப்பொழுதும் எனக்கு பாதுகாப்பில்லை என சொல்லி அரசியலிலிருந்தே விலகினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?


எங்கோ ஒரு கிராமத்தில் 4 பேரை சமாளிக்க பயந்து தேர்தலைவிட்டே ஓடியவர்தான் இன்று திமுகவிற்கு சவால்விட்டுகொண்டிருக்கின்றார்




இதில் வைகோ அன்று கலைஞருக்காய் உளியினை பிடித்தார், டிடிஆரை பிடித்தார் என ஏகபட்ட முட்டுகள்.


கடலுக்குள் அப்படி சென்றார், புலிகளை இப்படி அதிரடியாக சந்தித்தார் என ஏகபட்ட அழிச்சாட்டியம்


புலிதலைவனை யார்தான் சந்திக்கவில்லை? நம்ம ராஜ்கிரண், மகேந்திரன் கூட பார்த்துவிட்டுத்தான் வந்தார்கள், சாமியார் ஜெகத் கஸ்பர் கூட பார்த்தார்.


என்ன கிழித்தார் வைகோ? அவர் நடத்திய வழக்கு ஒன்று ஜெயித்திருக்கும்? போராடிய ஒரு போராட்டத்தில் வெற்றி கிடைத்திருக்கும்


சும்மா எல்லாம் ஒரு பப்ளிசிட்டி....


கலைஞருக்கு தெரியாமல் புலிகளோடு உறவாடியதும், ராஜிவ் கொலை என்ற பாதகம் நடந்தபின்னும் கலைஞரை புலிகளை ஆதரி என சொன்னதும் என்ன வகை?


அப்படி கொலைக்கு அஞ்சா புலிகள், தமிழகத்தில் எதனையும் செய்ய துணிந்த புலிகளுக்காக தன்னை வளர்த்த கலைஞரை எதிர்த்தது என்ன வகை?


உச்சமாக புலி பெரிதா? கழகம் பெரிதா? எனும்பொழுது கட்சியினையே உடைத்து சென்றது என்ன நன்றி?


உச்சமாக எவனோ சொல்லிகொண்டிருக்கின்றான், அன்று வைகோ இல்லாவிட்டால் திமுக ஆட்சியினை வாஜ்பாய் டிஸ்மிஸ் செய்திருப்பாராம்


எப்படி இருக்கின்றது?


நமீதா இல்லாவிட்டால் அதிமுக வென்றிருக்காது என்பது போல இருக்கின்றது


ஒரு காரணமும் இன்றி கலைஞர் ஆட்சியினை கலைக்க மறுத்தார் வாஜ்பாய், ஜெயாவின் வறட்டுபிடிவாதம் அவருக்கு புரிந்திருதது. அன்று யானைஇறவிலே புலிகளை விரட்ட இந்தியா சில உதவிகளை சிங்களனுக்கு புரிந்தபோது அமைதியாக இருந்த வைகோ, கலைஞரை காத்தாராம்


எங்க வந்து டூப்பு உடுற டேய்...


வைகோ 1992ல் இருந்து கலைஞருக்கு செய்ததெல்லாம் துரோகம், அதுவும் ஈழ போரில் கலைஞர் மீது அவர் வீசிய சேறு கொஞ்சமல்ல‌


இன்றுவரை பிரபாகரன் இறந்ததை வெளிப்படையாக சொல்லாமல் தமிழக மக்களை ஏமாற்றிவருபவர்தான் வைகோ


அரசியல் நாகரீகம் தாண்டி சொல்ல கூடாத வார்த்தைகளை சொன்னார், செய்ய கூடாத காரியங்களை செய்தார்


இன்றுவரை கண்டெய்னர் கதைக்கே அவர் வாய் திறக்கவில்லை


ஒவ்வொரு திமுக தொண்டனுக்கும் அவர் மீது கோபம் உண்டு, அதாவது எதிர்கட்சி என்பது வேறு, உடனிருந்து வளர்ந்து பிரியும் துரோக கட்சி என்பது வேறு


வைகோ நடத்தியது துரோக கட்சியே


உண்மையில் வைகோவினால் பாதிக்கபட்டது அவர் பின்னால் சென்ற அந்த முன்னாள் மதிமுகவினரே


அன்று அவரை ஓட விரட்டியவர்கள் திமுக திரும்பிய மதிமுகவினராக இருக்கலாம்


வாய்ப்பு நிரம்ப இருக்கின்றது..














No comments:

Post a Comment