கலைஞரின் அறிக்கையும், செய்தியும்,பேச்சும் வராத தற்போதைய காலங்களை கடந்து செல்வது மிக மிக கடினமானதாக இருக்கின்றது
தமிழக செய்திகள் பக்கம் செல்லவே மனம் விரும்பவில்லை
அவரை தேடிவிட்டு திரும்பிவிடுகின்றேன்..
எதிரிகளாக இருந்தாலும் எம்ஜிஆரும், ஜெயாவும் அவ்விஷயத்தில் கொடுத்து வைத்தவர்கள்
அவர்கள் சாகும்வரை கலைஞரின் அறிக்கைகளையும், செய்திகளையும் கேட்டுகொண்டே இருந்திருக்கின்றார்கள்..
கலைஞரின் குரல் இல்லா கொடுங்காலம் அவர்களுக்கு இல்லை..
கலைஞரின் அலை என்பதில்தான் லாவகமாக கப்பல் ஓட்டியிருக்கின்றார்கள்.
கலைஞர் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில், ஊடகங்களில் ஒரு பெரும் சுணக்கமும் , குறைந்த வலுவுமே தெரிகின்றன
வந்து விடுங்கள் அய்யா
வந்து எமக்காகவாது கொஞ்ச நாள் எழுதிவிடுங்கள் அய்யா..
மாலையில் விளையாடும் குழந்தைகளுக்கு, அந்த சூரியன் இன்னும் கொஞ்சநேரம் வானத்திலே இருக்காதா? என்றொரு ஏக்கம் வரும்
அதே ஏக்கம் எமது நெஞ்சிலும் எழுகின்றது
அந்த சூரியன் இன்னும் கொஞ்சகாலம் பிரகாசிகட்டும்,
மனம் அப்படி ஏங்கத்தான் செய்கின்றது.
அவர் கடவுளை நம்பாமல் இருக்கலாம், ஆனால் அவருக்காக நாம் பிரார்த்திகொள்வோம்
பிரார்த்திப்போம்
திரும்ப வாருங்கள் கலைஞரே..
No comments:
Post a Comment