Monday, December 19, 2016

கறுப்பு பணத்தினை ஒழித்துவிட்டோம், இந்தியா சுபிட்சமாகுமா ?

கறுப்பு பணத்தினை ஒழித்துவிட்டோம் இனி இந்தியா சுபிட்சமாகும் என்றார்கள்


உண்மையில் அப்படி ஒழித்தால் என்ன ஆகியிருக்கும்? விலைவாசி இறங்கி இருக்கும், மக்கள் சுமை குறைந்திருக்கும்


ஆனால் பெட்ரோல் விலை ஏற்றியிருக்கின்றார்கள்




சர்வதேச சந்தையில் பெருமாற்றம் இல்லை, அப்படி இருந்தும் ஏன் ஏற்றுகின்றார்கள்?


உண்மையில் இந்த அரசு தடுமாறுகின்றது, டாலருக்கு நிகராண மதிப்பு மிக அதிகரிக்கின்றது. அதனை தடுக்க பெட்ரோல் விலையில் கை வைக்கின்றார்கள்


அரசு ஆஆஆஆய்ய்ய் ஏய்ய்ய்ய் என அதிரடி காட்டினாலும் அதன் பலவீனமும், நிர்வாக கோளாறும் பல இடங்களில் தெரிகின்றன‌


சறுக்கிகொண்டே இருக்கின்றார்கள்


110 கோடி மக்கள் தொகையும், பின் தங்கியும் இருக்கும் நாட்டில அதிரடு கேஷ்லெஸ் வர்த்தகம் எல்லாம் சுத்தமாக சாத்தியமே இல்லை


இந்திய பணமதிப்பு சரிகின்றது, உலகமே பெட்ரோல் விலையினை குறைத்த வேளையில் இவர்கள் ஏற்றுகின்றார்கள், ஏதோ மர்மமாக நடக்கின்றது


கேஷ்லெஸ் இந்தியா என சொல்லி மக்களிடமிருந்து அனைத்தையும் பறித்துவிடும் முழு முயற்சியினை இந்த அரசு செய்துகொண்டிருக்கின்றது


இந்த ராகுல் காந்தியும் தன்னிடம் ஆதாரம் இருக்கின்றது, அது இருக்கின்றது இது இருக்கின்றது, காட்டினால் நாடு தாங்காது என சீறுகின்றார், ஆனால் காட்ட மாட்டார்


காட்டாவிட்டால் மட்டும் நாடு தாங்கவா போகின்றது?







கொசுறு

பதவி மூப்பு அடிப்படையில் புதிய ராணுவ தலைமைத் தளபதி நியமனம் நடக்கவில்லை என பாஜக அரசு மேல் கடும் சர்ச்சை

நியாமான முறையில் நடந்ததாக பாஜக அறிவிப்பு

கட்சியின் மூத்த தலைவர்களான அத்வாணி, வாஜ்பாய் எல்லாம் ஓரம்கட்டிவிட்டு திடீரென மோடி நியாயப்படி பிரதமர் ஆனார் அல்லவா? அந்த வகை நியாமாக இருக்கலாம்.


பாஜக ஆட்சியின் சீனியாரிட்டி நியாயம் அப்படி, அது ராணுவ தள்பதி நியமணத்திலும் தெரிந்திருக்கின்றது




 


No comments:

Post a Comment