Saturday, December 31, 2016

சின்னம்மா அதிமுக பொது செயலாளராக பதவி ஏற்றார்...

https://youtu.be/_gAdt9nGf_k

 

எம்ஜிஆர், ஜெயா சமாதிகளில் சசிகலா அஞ்சலி, அண்ணா சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார்

ஜெயா, எம்ஜிஆர் சமாதி சரி, அண்ணா சமாதியில் எதற்கு அஞ்சலி, அவர்தான் இந்த கட்சிக்கு பிதாமகன் என்பதற்கா?

இருக்கலாம்


ஆனால் அப்படியே கோபாலபுரம் சென்று கலைஞரிடமும் ஒரு ஆசி வாங்கி இருக்கலாம்

சசிகலா நடராஜன் திருமணத்தினை அவர்தான் ஒருகாலத்தில் நடத்தி வைத்தவர்

அது என்ன ராசியோ கலைஞருக்கு?

அவரை ஆதரித்தவர்கள்/எதிர்த்தவர்கள் மட்டுமல்ல, எதிர்த்தோருடன் இருந்தவர்கள் கூட சிகரம் தொடுகின்றார்கள்

இன்றைய தேதியில் சசிகலா ஆசிவாங்க கலைஞரை தவிர பொருத்தமானவர் யாருமில்லை

எம்ஜிஆர் , ஜெயா, சசிகலா என எல்லோரும் கலைஞர் இன்றி உருவாகியிருக்க முடியாது.

இது சசிகலாவின் ஆள்மனதிலும் நிச்சயம் இருக்கும்.

No comments:

Post a Comment