Friday, December 16, 2016

இனி ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது...

தமிழ்நாட்டை "இனி ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது" என ஒரு காலத்தில் சவுடால் பேசிய ரஜினிகாந்த் இன்று தனுஷ் படத்திற்கு கிளாப் அடித்துகொண்டிருக்கின்றார்


அவர் எப்போழுது பேசுவார்? என்ன பேசுவார்? என யாருக்கும் தெரியாது, ஆனால் பேசவேண்டிய நேரத்தில் பேசவே மாட்டார்.







மத்திய அரசு கஜானாவை நிரப்புவதிலேயே கவனம்: திருநாவுக்கரசர்

மத்திய அரசு இந்திய கஜானாவினை நிரப்புவதில் கவனமில்லாமல் பாகிஸ்தான் கஜானாவினை நிரப்புவதிலா கவனமாக இருக்கும்?

இவர் அம்மா இறந்த அதிர்ச்சியில் என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றார், பேசட்டும்

இவரின் கவனம் எங்கிருக்கின்றது? அதிமுக கூட்டணியில் இடம்பிடிப்பது, முடிந்தால் அதிமுகவிலே இடம் பிடிப்பது



தமிழகம் இதுவரை காணாத பெரும் பாலியல் கொடுமைகள் தர்மபுரி பக்கம் அரங்கேறி இருப்பதாக சில வெளிநாட்டு செய்திகள் சொல்கின்றன‌


நடந்திருக்கும் கொடுமை மிக மிக பெரிது


டியூசன் சென்டர் நடத்தியவனும், பாடம் நடத்தியவனும், அவர்களின் செல்போன் சர்வீஸ் செய்தவனும் செய்ய கூடாத செயல்களை செய்து கிட்டதட்ட 30க்கும் மேற்பட்ட மாணவிகளை சீரழித்திருக்கின்றனர்


ஒரு தமிழக ஊடகமோ, தொலைகாட்சியோ இதனை பற்றி ஒரு வரி எழுதவில்லை, சமூக ஊடகங்களிலும் ஒரு வரி இல்லை


சின்னம்மா எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதால் செய்திகள் அவரை சுற்றியே வருகின்றன, என்றாலும் கொஞ்சமாவது இதனை சொல்லலாம் அல்லவா?


பாதிக்கபட்ட மாணவிகளின் எதிர்காலம் முக்கியம் என செய்திகள் மறைக்கபட்டாலும், குற்றவாளிகள் நிலை என்ன?


சமூக ஊடகங்களில் தர்மபுரி பக்கம் இருந்து ஒருவருமா? இல்லை


பெரும் கொடுமை நடந்திருக்கின்றது, நிச்சயம் இது பெரும் அநியாயம், ஏராளமான பெண்கள் பாதிக்கபட்டிருக்கின்றார்கள்


ஒரு சலசலப்பும் இல்லை, வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகளை கசியவிடுகின்றன‌


என்ன தமிழ் ஊடகங்களோ தெரியவில்லை


தமிழகத்தில் 2 பெண்க்கள்தான் உண்டு, ஒன்று ஜெயா இன்னொன்று சசிகலா என இந்த ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன‌


குஷ்பூவிற்கும், சிம்புவிற்கும் எதிராக பொங்கிய மாதர் சங்கங்களை காணவே இல்லை


மாதர் தம்மை இழிவு செய்தால் பொங்குவார்கள், கொதிப்பார்கள்


ஆனால் மாதர் தம்மை கிழித்து எறிந்தால் கம்மென்று இருப்பாரகள்.


தர்மபுரி செய்திகள் என்றால் இப்படி முடிக்கலாம், ஒன்று குற்றவாளிகளுக்கு பெரும் சாதிய பலம் இருக்கவேண்டும் இல்லாவிட்டால் பாமக போன்றவை சும்மா இருக்காது


அல்லது பாதிக்கபட்ட பெண்கள் வறுமையான, சாதி பலம் இல்லா அபலைகளாகவும், மானத்திற்கு பயந்து அஞ்சி ஒடுங்கும் ஏழைகளாகவும் இருக்கவேண்டும்


இப்படி இருக்கும் பட்சத்தில் ஒருநாளும் செய்திகள் வெளிவராது, இந்த செய்தியும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடதக்கது.






No comments:

Post a Comment