ஸ்டீபன் ஹாக்கிங் என்றொரு விஞ்ஞானி இருக்கின்றார், இன்றைய தேதியில் அவர்தான் மிக சிறந்த விஞ்ஞானி , ஐன்ஸ்டீனுக்கு பின் அவரிடம் விஞ்ஞானம் கொட்டி கிடக்கின்றது, விண்வெளி குறித்து அவர் காட்டும் வழிதான் இன்றைய விஞ்ஞானிகளுக்கு பாதை.
மிக ஆச்சரியமான விஞ்ஞானி அவர், அவர் சொல்லும் கருத்துக்களும் கணிப்புகளும் பெரும் பரபரப்பானவை
ஆனால் பாவம்
அவரால் பேசவோ எழுந்து நடமாடவோ முடியாதபடி ஒரு வகையான பக்கவாதம், அதனால் அவர் விழிதிரையில் இயங்கும் ஸ்பெஷல் கம்பியூட்டர் ஒன்றை பயன்படுத்துகின்றார், அதன் மூலம் தன் கருத்துக்களை சொல்கின்றார்
சில வயர்களை அவர் தலையில் இணைப்பார்கள், அவர் சொல்ல வருவது திரையில் வரிகளாக வரும்.
அவரும் ஸ்பெஷல், அவர் கம்பியூட்டர் அவரை விட ஸ்பெஷல்
இவர் கதை இப்பொழுது எதற்கு? விஷயம் இருக்கின்றது.
இனி அப்படி ஒரு கம்பியூட்டரை போயஸ்கார்டன் வீட்டில் பொருத்தி சின்னம்மாவினையும் அந்த கம்பியூட்டரையும் இணைத்துவிடாமல் இனி அக்கட்சியினை நடத்தா சாத்தியமில்லை
சசிகலா இன்னும் வாய்திறந்து பேசவில்லை, பேச போவதுமில்லை
இந்த கட்சிக்காரர்களும் அவரை விடுவதாக இல்லை, பொதுசெயலாளர் என தேர்ந்தெடுத்தாகிவிட்டது
இனி லண்டனிலிருந்து அந்த ஸ்பெஷல் கம்பியூட்டர் சென்னை வரும், பெரும் மக்கள் சக்தி கொண்ட இயக்கத்தின் தலைவி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பாணியில் கட்சியினை நடத்துவார்
அவரை பார்த்துவிட்டு செல்லும் அமைச்சர்கள், அவரையும் அவர் மனவோட்டம் தெரியும் அந்த கம்பியூட்டரையும் வணங்கிவிட்டு செல்வார்கள்
மோடி கேஷ்லெஸ் இன்டியா என சொல்லிகொண்டிருக்கின்றார்
தமிழகம் ஸ்பீஸ்லெஸ் மாநிலமாக ஆகிகொண்டிருக்கின்றது
No comments:
Post a Comment