Friday, December 16, 2016

ஜெயா மீண்டும் வந்துவிடுவாரா?: திருநாவுக்கரசு

திருநாவுக்கரசர் ஜெயா மீண்டும் வந்துவிடுவாரா? என சொன்னதற்கு, இப்படி சொன்னால் ராஜிவ் மீண்டும் வந்துவிடுவாரா? என இனவுணவாளர்கள் கேட்க எவ்வளவு நேரமாகும் என பதிவிட்டிருந்தோம்


சொல்லி வைத்தாற்போல அடுத்த 5 நிமிடத்திலே சீமான் அதே பாணியில் சீறிவிட்டார்.


நம்மை கண்காணித்து கொண்டிருப்பாரோ?




ஆனால் சில அதிரடி கேள்விகளையும் கேட்டார், நடராஜனின் நெருங்கிய நண்பரான சீமான், திடீரென சசிகலாவினை எதிர்க்கும் நோக்கம் தெரியவில்லை. ஜெயா மரணத்தில் அவருக்கு உண்மை வேண்டுமாம்


ஆச்சரியமாக அவரின் அண்ணன் பிரபாகரன் மர்மத்தில் அப்படி ஒரு கோரிக்கையினை அவர் வைக்கவேயில்லை, கேட்டால் உயிரோடு இருக்கின்றார் என தாடையினை தடவுவார்


ஜெயாவின் மருத்துவ அறிக்கையினை சீமான் கேட்கலாம், ஆனால் எப்படி உடனே கல்லறை அமைக்கபட்டது, எப்படி உடனே பெட்டி கிடைத்தது என்பதெல்ல்லாம் ஓவர், இப்படி அதிகபடியான கற்பனைகளில்தான் அன்னார் அடிக்கடி சிக்குகின்றார்


சரி இருக்கட்டும்


சசிகலா புஷ்பா வழக்கே தொடுக்க போகின்றாராம், சீமானின் குரலும் ஓங்கி ஒலிக்கின்றது, இவர்கள் எல்லாம் ஏதோ ஒரு புள்ளியில் இணைகின்றார்கள். இன்னும் பலர் இணையலாம்


அது எந்த புள்ளி??


ஒரு "மண்"ணும் புரியவில்லை.








No comments:

Post a Comment