Monday, December 26, 2016

தை வருது ... ஜல்லிக்கட்டு எங்கே?

https://youtu.be/E-81MzYid5c




ஜல்லிகட்டில் மாடு கொடுமைபடுத்தபடுகின்றது என்கின்றீர்கள், கட்டை வண்டியிலும் , உழவிலும் மாடு என்ன இன்புறுகின்றதா?


முத டிராக்டர் கொடுங்கள்..முதலில் எல்லா விவசாயிக்கும் டிராக்டர் கொடுங்கள்உழவு காளை மாட்டுக்கெல்லாம் ஓய்வு கொடுங்கள்..


வண்டி இழுக்க லாடம் எனும் பெயரில் மாட்டின் காலில் எப்படி எல்லாம் ஆணி அடிக்கின்றார்கள்?, அது கொடுமை அல்லவா?


அதற்கு முதலில் எல்லா விவசாயிக்கும் ஒரு டெம்மோ கொடுத்துவிட்டு அந்த காளைகளை மீட்டுகொண்டு காலின் லாடத்தை பிடுங்குங்கள்


கதற கதற மாட்டிற்கு மூக்கணாங்கயிறு போடுவதும், காலில் லாடம் அடிப்பதும் கொடுமை ஆகாதாம், ஆனால் அவற்றை உற்சாகமாக துள்ளவிட்டு தழுவுவது கொடுமையாம்


முதலில் மூக்கணாங்கயிறு போடுவதையும், லாடம் அடிப்பதையும் நிறுத்த சொல்வீர்களா?


அதுதான் உண்மையான காளை மாட்டு நலன்.. செய்வீர்களா?


இந்த ஆர்யா, ஐஸ்வர்யா, பேட்டா போன்ற இம்சைகள் இதற்கு முதலில் பதில் சொல்லட்டும்.


ஜல்லிகட்டில் மாடு வதைபடுகின்றதாம்


கன்றுகுட்டிக்கு பசு சுரக்கும் பாலை எல்லாம், அதே கன்றினை பசுமுன் கட்டிவைத்து கதற கதற கறக்கின்றீர்களே, அது வன் கொடுமை ஆகாதா?


அது பசு சித்திரவதை ஆகாதா?, அது கன்றிற்கான பால் அல்லவா?, வலுகட்டாயமாக கட்டி வைத்து கறப்பது என்ன நியாயம்??


வளர்த்த பசுவினை கட்டி வைத்து பால் கறக்கலாமாம், ஆனால் காளையினை வளர்த்து கட்டிபிடிக்க கூடாதாம்.


உழவு காளைக்கும், வண்டி மாட்டுக்கும், பசுவிற்கு ஒரு நியாயமாம்,


ஜல்லிகட்டிற்கு இன்னொரு நியாயமாம்.


விசித்திரமான இந்தியா








No comments:

Post a Comment