Monday, December 26, 2016

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை..











[caption id="" align="aligncenter" width="376"]Image may contain: 1 person யேல் [/caption]


 






சென்னை கோட்டையினை வெள்ளையர் கட்டி வியாபாரம் செய்து, பின் ஆட்சிக்கு வந்தபின் அக்கோட்டை முக்கியத்துவம் வாய்ந்ததானது, அன்று தென்னிந்தியாவின் தலமை செயலகம் அதுதான்


அப்பொழுது 1700களில் தலமை செயலாளராக‌ வந்தவர் யேல்,


வந்து என்ன செய்தார்? வழிகாட்டினார், யாருக்கு?




முன்னாள் தலமை செயலாளர் ராமமோகன் ராவிற்கு


ஆம், சென்னை கோட்டையில் முதன் முதலில் ஊழலில் ஈடுபட்டவர் என வரலாறு அவரைத்தான் சொல்கின்றது, மிக கடுமையான ஊழல். ஆனால் ராம்மோகன் ராவ் போல சிக்கவில்லை


அமெரிக்கா தப்பினார், அங்கு ஒரு கல்லூரி தொடங்கினார் , பின் அது பல்கலை கழகமாயிற்று.


அதன் பெயர் யேல் பல்கலைகழகம்


இந்த யேல் பற்றிய ஊழல் குறிப்புகளும் இன்னும் ஏராள குறிப்புகளும் சென்னை மியூசியத்தில் சிக்கின, தாமதமாக தெரிந்துகொண்ட யேல் பல்கலைகழத்தினர் அதனை மீட்க நினைத்தபொழுது இந்தியா கொடுக்கவில்லை. என்ன இருந்தாலும் தங்கள் நிறுவணர் ஊழல்வாதி என்பது அவர்களுக்கு அவமானம் அல்லவா?


பின் என செய்தது? அண்ணாவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்து ஐஸ் வைத்தது, அண்ணா ஆட்சிக்கு வந்தபின் அந்த யேல் பற்றிய குறிப்புகளை, அவர் கைபட எழுதிய பிரதிகளை சென்னையில் காணவில்லை


ஏன் எப்படி என நீங்கள் கேட்க கூடாது, காணவில்லை அவ்வளவுதான்


ஆக சென்னை கோட்டையில் முதல் ஊழல் செய்த தலமை செயலாளர் யேல், பின் அவரின் குறிப்புகள் அண்ணா காலத்தில் மர்மமாயின‌


அதே சென்னை கோட்டையில் இப்பொழுது சிக்கி இருக்கின்றார் ராவ், ஆனால் ஆட்சி அண்ணா திமுகவுடையது


சென்னை கோட்டையினை உலுக்கிய ஊழல் வழக்குகளில் யேலுக்கு பின் ராவ் இடம்பெற்றுவிட்டார்.


இந்த இரு ஊழல்வாதிகளுக்கும் அண்ணா பெயருக்கும் ஏதோ பூர்வஜென்ம தொடர்பு


தப்ப விட்டிருந்தால் கனடாவிலோ, நியூஸிலாந்திலோ இந்த ராவும் பல்கலைகழகம் கட்டியிருக்கலாம், பின் அவர்கள் பன்னீர்செல்வத்திற்கும் சசிகலாவிற்கும் டாக்டர் பட்டம் அளித்திருப்பார்கலாம், எல்லாம் நடந்திருக்கும்




[caption id="" align="aligncenter" width="420"]Image may contain: 1 person, glasses ராம் மோகன் ராவ்[/caption]

நாமும் டாக்டர் பன்னீர் செல்வம், டாக்டர் சசிகலா என அழைத்துகொண்டிருப்போம், இந்த பாழாய்போன வருமான வரிதுறை எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது.


என்ன விசித்திரமோ?


கலைஞர் ஆட்சியில் ஒரு கட்டை பீடியோ, அரை கிலோ உப்பு காணாமல் போனாலே ஆட்சியினை டிஸ்மிஸ் செய் என கொடிபிடிப்பவர்கள் இந்த மாபெரும் ஊழலிலும் அவமானத்திலும் வாயே திறக்கவில்லை


அது ஆச்சரியமல்ல‌


திமுகவே அதுபற்றி ஒரு குரலும் எழுப்பவில்லை என்பதுதான் ஆச்சரியம்


என்ன மர்மமோ


யேல், யேல் ஊழல், பல்கலை கழகம், அண்ணாவின் டாக்டர் பட்டம், யேல் குறிப்புகள் காணாமல் போகுதல் என திராவிட கட்சிகளுக்கும் யேலுக்கும், அண்ணாவிற்கும், இன்று ராவிற்கும் , அண்ணா திமுகவிற்கும் உள்ள தொடர்புகள் ஏராளம்


ஒரே வித்தியாசம்


அன்று கிழக்கிந்திய கம்பெனி
இன்று அனைதிந்திய அதிமுக‌


மற்றபடி அதே சென்னை கோட்டை












தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக நிரப்பும் : தமிழிசை

எது? எம்ஜிஆர் கல்லறைக்கும், ஜெயா கல்லறைக்கும் இடையில் உள்ள வெற்றிடத்தையா?




 

No comments:

Post a Comment