Thursday, December 15, 2016

சசிகலாவினை விமர்சித்தால் உடனே போலிசை விட்டு தூக்குமாம் ....





அதிமுக பற்றியோ, சசிகலாவை பற்றியோ சமூகவலைத்தளங்களில் யாராவது வதந்தி பரப்பினால் மற்றும் கிண்டல் மீம்ஸ்கள் பதிவேற்றினால் அவர்கள் மீது பொலிசார் மூலம் கடும் நடவடிகை எடுக்கப்படும் : அதிமுக தொழில்நுட்ப பிரிவு

கட்சிக்கு தொழில்நுட்ப பிரிவு உண்டாம், அது முழு வேலையாக சமூக வலை தளங்களை கண்காணிக்குமாம்

இவை எல்லாம் எதிர்கட்சி சதியாம், கட்சிக்காரன் எழுதும்போது எப்படி எதிர்கட்சி என்று யாரும் கேட்டுவிட கூடாது


பிரபாகரனை ஆதரித்தால் மட்டும் அவன் தமிழுணர்வாளன் என்பது போல சசிகலாவினை ஆதரித்தால் மட்டுமே அவன் இனி அதிமுககாரனாம்..

யாரேனும் சசிகலாவினை விமர்சித்தால் உடனே போலிசை விட்டு தூக்குமாம்

போலிசுக்கு இருக்கும் வேலைகளில் இதுவும் ஒன்று, இதில் இந்த ராமஜெயம் கொலைவழக்கு போன்ற தீரா வழக்கெல்லாம் இனி தீரா மர்மமே

ஆக சசிகலாவினை விமர்சித்து மீம்ஸ் போடுபவர்கள், கண்ணை மூடி ராம்குமார் சிறை அறையினை நினைத்துகொள்ளும்படி அந்த் தொழில்நுட்ப பிரிவு மறைமுகமாக சொல்கிறது

சசிகலா போனால் போகட்டும்

எங்களுக்கு கலைஞர், சீமான், தமிழிசை , திருமா, மோடி, டிரம்ப் என விமர்சிக்க எத்தனை பேர் உண்டு தெரியுமா?

அவர்கள் எல்லாம் ஒருவார்த்தை சொல்வார்களா?

அவர்கள் எல்லாம் அவ்வளவு டீசண்டு....

இந்த அதிமுக பார்ட்டிகள் எப்பவுமே மகா சீரியஸ் கோஷ்டிகள்

இதற்கு வட கொரியா எவ்வளவோ பரவாயில்லை, தான் ஒரு சர்வாதிகார நாடு என்றாவது ஒப்புகொள்கின்றது, வோட்டு என்று அந்த அதிபர் எங்கும் செல்லவில்லை

ராணுவ ஆட்சி நாடுகளும், மன்னராட்சி நாடுகளும் கூட ஆம் இங்கு இதுதான் சட்டம், உன் வோட்டு வேண்டாம் என சொல்கின்றன‌

தமிழகம் அதிலும் சேராது, ஜனநாயகத்திலும் சேராது. தமிழனை போலவே அதுவும் விசித்திரம்.







 ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: ராமதாஸ்

இன்றைய தமிழகத்தில் உருப்படியாக கேள்விகள் கேட்டுகொண்டிருப்பது மருத்துவர் ஒருவர் தான்


கட்சி தலைவர் மட்டுமல்ல, அவர் ஒரு மருத்துவரும் கூட. அதனால் இது மிக நியாமான கோரிக்கையே

பணம் மட்டும் வெள்ளையானால் போதுமா?

மருத்துவ அறிக்கைகளையும் இந்த தேசத்தில் வெள்ளை ஆக‌ வேண்டாமா? மிஸ்டர் மோடி




கொசுறு

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

அங்கிள் சைமன், இதோ தமிழ் முதல்வர் ஆட்சியில் தமிழ் மீணவனை தொட்டுபார்க்கும் தைரியம் சிங்களனுக்கு எப்படி வந்தது?

தமிழ் முதல்வன் வந்தாகிவிட்டது, சிக்கல் தீரவில்லை


சரி உங்கள் வழக்கமான சத்தத்தில் மானமுள்ள, வீரமுள்ள, ஒரு அப்பனுக்கு பிறந்த தமிழன் முதல்வராக வேண்டும் என சொல்லுங்கள் பார்க்கலாம்.




 




No comments:

Post a Comment