Friday, December 30, 2016

அரசியலில் யாரையும் நம்ப கூடாது....





காமராஜர் தமிழக காங்கிரஸ் தலைவராக அதாவது தனக்கு எதிரான கட்சியின் தலைவராக இருந்தபொழுது அவரின் ஒவ்வொரு அசைவினையும் விமர்சித்த கலைஞரை


எம்ஜிஆர் கட்சியின் பொதுசெயலாளராகும்பொது நடிகர் கட்சி, அட்டை கத்தி என்றெல்லாம் வாட்டிய கலைஞரை


ஜெயா ஜாணகி என பிரிந்து நின்றபொழுது நிமிடத்திற்கொருமுறை அறிக்கை அனுப்பிய கலைஞரை





ஜெயா ஆட்சியினையும், கட்சியினையும் கைபற்றும்பொழுது அம்மையார் என சொல்லி சொல்லி விமர்சித்த கலைஞரை

சசிகலா பொறுப்புக்கு வரும்பொழுது காணவே இல்லை, அவருக்குத்தான் வயதாகிவிட்டதென்றால், அடுத்த வாரிசாவது சில கருத்தோ, வாழ்த்தோ சொல்ல கூடாதா?

பல விஷயங்கள் நோக்க கூடியவை

1996ல் ஜெயலலிதாவினை முடக்க காட்டிய வேகங்களை 2001க்கு பின் திமுக குறைத்துகொண்டது

அதன் பின் ஜெயா ஆட்சியில் கலைஞருக்கோ, கலைஞர் ஆட்சியில் ஜெயாவிற்கோ சிக்கலே இல்லை

மாற்றி சொல்ல வேண்டுமென்றால் கலைஞரின் ஆட்சியில் சசிகலாவின் மிடாஸ் இயங்கியது, ஜெயா ஆட்சியில் கலைஞர் கும்பலின் பீர் கம்பெனி இயங்கியது

அதாவது ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருக்கின்றார்கள்

உனக்கு நான் மட்டும் எதிரி, எனக்கு நீ மட்டும் எதிரி. அவ்வப்போது மோதிகொள்வோம் ஆனால் ஒருவர் பிசினஸில் இன்னொருவர் தலையிட கூடாது, குறிப்பாக இன்னொரு கட்சி வளர்ந்துவிட கூடாது

இன்று சசிகலா பொறுப்பு வந்தபின்னும் திமுக பக்கம் ஒரு சலசலப்புமில்லை, 25 வருடமாக ஜெயாவுடன் இவர்தான் இருந்தார், இனி இவர் மட்டும் இருப்பார் மற்றபடி சிக்கல் இல்லை என அவர்கள் ஒதுங்கிகொண்டது போல் தெரிகின்றது

சன்டிவியின் செய்தி அணுகுமுறை அதனைத்தான் சொல்கின்றது

அரசியலில் யாரையும் நம்ப கூடாது என்பார்கள்,

அரசியல் கட்சியிலும் யாரையும் நம்ப கூடாது என்பது மட்டும் விளங்குகின்றது








No comments:

Post a Comment