Thursday, December 29, 2016

மிஸ்டர் சைமன், வாட் ஆர் யு டூயிங்?

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் பொதுக்கூட்டம் : சீமான் வீரவணக்கம்


மிஸ்டர் சைமன், வாட் ஆர் யு டூயிங்?


இந்த வீரபெரும்பாட்டி என்ன செய்தார்?, முன்பொரு காலத்தில் வடுக நாட்டின் அரசன் திப்புசுல்தானோடு சேர்ந்து வெள்ளையனை எதிர்த்தார்,




தமிழகத்தில் அவர் போராடியபொழுது அவரோடு சில நாயக்க பாளையக்காரரும் இருந்தார்கள்


இப்படி வடுகர்களுடம், வந்தேறிகளுடனும் இணைந்து வெள்ளையனுடன் போராடிய வேலுநாச்சியாருக்கு எப்படி வீரவணக்கம் செலுத்தலாம்??


அப்படி அஞ்சலி செலுத்த சென்றால் வடுக மக்களுடன் அல்லவா செல்லவேண்டும்?


இன்னொன்று தெரியுமா? இந்த வேலுநாச்சியார் 7 மொழி பேசுவாராம், அதில் தெலுங்கும் ஒன்றாம்


ஆக தெலுங்கு வடுக மொழி படித்த, தெலுங்கர்களோடு பழகிய ஒரு இனதுரோகிக்கா வீரவணக்கம்?


இது தமிழுணர்வா?


வெள்ளையர்களே இந்த வடுக வந்தேரிகளை விரட்டிவிட்டு தனி தமிழ்நாடு அமைத்து தாருங்கள், நான் உங்களுக்கு சந்தோஷமாக வரி கட்டுகின்றேன் என சொல்லியிருந்தால் உங்கள் அஞ்சலியில் ஒரு அர்த்தம் இருக்கின்றது


தமிழனுக்கும் தெலுங்கனுக்குமான போரை நடத்தும் நீங்கள், தெலுங்கனோடு இணைந்து போரிட்ட வேலுநாச்சியாருக்கு எப்படி அஞ்சலி செலுத்தலாம்?


முப்பாட்டன் முப்பாட்டி என்றுதானே வரும்? இது என்ன பெரும்பாட்டி?


இனி முருகபெருமான் பெரும்தாத்தா என்றா அழைக்கபடுவார் அங்கிள்?


பலமொழிகளை கற்று, எல்லா இன மக்களையும் அனுசரித்து பெரும் எடுத்துகாட்டு வாழ்வு வாழ்ந்த அந்த மகாராணிக்கு, இனவாதம் பேசிகொண்டிருக்கும் இவர் அஞ்சலி செலுத்துவாராம்


என்னா டூப்பு......



No comments:

Post a Comment