போயஸ் கார்டனில் ஜெயா ஆவி நிலவுவதாக சர்ச்சை, மாந்த்ரீகம் செய்ய மலையாள மந்திரவாதிகள் வருவதாகவும் செய்திகள்
நிறைவேறாத ஆசை உள்ளவர்கள் இறந்தால் அவர்கள் ஆவிகளாக அலைவார்கள் என்பது ஐதீகம்
அப்படி ஜெயாவிற்கு இருந்த ஆசைகள் மிக அதிகம், பிரதமர், ஜனாதிபதி அதற்கு மேல் உலக தலைவர்கள் வரை ஆகும் ஆசையும் இருந்திருக்கலாம்
திமுகவினை அழிக்கும் ஆசையும் இருந்தது
எந்த அமைச்சரும் 5 வருடம் நிம்மதியாக பதவியில் இருக்க கூடாது என்ற ஆசையும் இருந்தது
பின் எப்படி அவர் ஆன்மா சாந்தி அடையும்? அதுவும் தன்னால் ஓட விரட்டபட்டவர் எல்லாம் வந்து தன் உடலை சுற்றி நின்றதையும், தன் வீட்டில் ஹாயாக அமர்ந்திருப்பதை பார்த்தால் ஆவி எப்படி அமைதியாகும்?
அது உறுமத்தான் செய்யும்?
மலையாள மந்திரவாதிகள் வேறு வருகின்றார்களாம்
ஜே இருக்கும் போது தேர்தல் மனு தாக்கல் முதல் வேட்பாளர் அறிவிப்பு வரை குறித்துகொடுத்த அதே கேரள மந்திரவாதிகள் இப்பொழுது ஜெயா ஆவியினை அடக்க வருகின்றார்களாம்
இருக்கும் போது மட்டுமல்ல இறந்த பின்னும் மிரட்டுகின்றார் அல்லவா?, அதுதான் ஜெயலலலிதா.
போயஸ் கார்டனில் மட்டும் சுற்றுமாம், கோபாலபுரம் எல்லாம் செல்லாது
மீறி சென்றால் என்னாகும்? இப்படி எல்லாம் மந்திரவாதிகளை அழைக்கமாட்டார் கலைஞர், கால் வலிக்கின்றது கொஞ்சம் பிடித்துவிட முடியுமா? என கேட்பார்
அதன் பின் அந்த ஆவி அங்கே நிற்கும்?
No comments:
Post a Comment