இயேசுநாதர் சொன்ன பிரசித்திபெற்ற மலைப்பொழிவு இனி இவர்கள் பைபிளில் இல்லாமல் போகட்டும்
என்ன நடந்தது?
பயந்திருப்பார்களோ? அப்படி எதனை பார்த்து அஞ்சினார்கள்
பைபிளில் ஒரு வசனம் உண்டு, ஒரு தீர்க்கதரிசி மக்களை எச்சரிப்பார் "விரியன் பாம்பு குட்டிகளே, வரப்போகும் சினத்தில் இருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?" என யூத மக்களை யாரோ ஒருவர் எச்சரிப்பார்
எவனோ ஒரு சசிகலா அடிமை, அந்த வசனத்தை இவர்களிடம் சொல்லி இருக்கலாம்
அவ்வளவுதான், உடனே "மனம் திரும்பி" நற்செய்தியினை ஏற்று, ஜெயலலிதாவிற்கு அடுத்த முதல்வர் நீயே என நற்செய்தி சொல்ல சென்றுவிட்டார்கள்
இன்னும் என்னென்ன சொன்னார்களோ?
சென்றதே சென்றீர்கள் பாதிரிக்களே, அந்த அங்கியினை கழற்றிவிட்டு ஒரு அதிமுக வேட்டி கட்டிவிட்டு செல்ல கூடாதா?
கையில் என்ன வைத்திருக்கின்றீர்கள்? பைபிளா?
அதனை புரட்டுங்கள்
"வெளிவேடகாரனுக்கு ஐயோ கேடு" என்றொரு வசனம் இருக்கும், அது சத்தியமாக உங்களுக்கே.
இனி உங்களில் யாராவது யூதாஸை சர்ச்சில் திட்டுங்கள், அன்று இருக்கின்றது.
உங்களுக்கு அவன் எவ்வளவோ பரவாயில்லை. அவனை திட்டும் தகுதியினை நீங்கள் இழந்துவிட்டீர்கள், அவனை மகான் ஆக்கிவிட்டீர்கள்
விரியன் பாம்பு குட்டிகளே.....
சரி சென்றதே சென்றீர்கள், இயேசு சீடர்களுக்கு செய்தது போல பாதம் கழுவி முத்தி செய்துவிட்டு வாருங்கள்
வருமுன் தவறாது இந்த ஜெபத்தை ஜெபியுங்கள்
"பரலோகத்தில் இருக்கும் எங்கள் ஜெயாவே வாழ்க, உம்முடைய நாமம் தமிழகத்தை ஆள்க, உங்கள் அதிமுக ஆட்சி தொடர்க, உங்கள் சித்தம் அன்று செய்யபட்டது போல இன்றும் செய்யபடுக
எங்கள் அனுதின காணிக்கையினை எங்களுக்கு அருளும்.."
"பவர் நிறைந்த சசிகலாவே வாழ்க, அதிமுக உம்முடையதே, பெண்களுக்குள் அதிகாரம் மிக்கவர் நீரே, உம்முடைக கணவரான நடராஜனும் அதிகாரம் மிக்கவரே"
ஆமென்..
கொசுறு
தளபதி சொல்லாமலா என்னை தாக்கினார்கள் : வைகோ
அவர் சொல்லியிருந்தால் ஏன் காவேரி வாசலுக்கு இவர் வரும் வரை காத்திருந்தார்கள்?
உத்தரவிட்டால் இவர் வன்னிக்காட்டில் இருந்தாலும் தேடி பிடித்து நொறுக்கியிருக்கமாட்டார்களா?
No comments:
Post a Comment