Tuesday, December 20, 2016

மூன்று சதமடித்த கருண் நாயருக்கு வாழ்த்துக்கள்..


டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று சதம் என்பது அபூர்வம், வெகு சிலரே அதனை பெற்றிருக்கின்றார்கள்


அதுவும் அறிமுக தொடரிலே முச்சதம் என்பது பெரும் விஷயம், அப்படி அசத்தியவர்கள் எல்லாம் பின்னாளில் பெரும் ஜாம்பவன்களாக ஜொலித்திருக்கின்றார்கள்


முதலில் சதமே மூன்று சதமாக கொடுத்திருக்கும் கருண் நாயருக்கு வாழ்த்துக்கள்





பொதுவாக மலையாளிகள் ஆதிக்கம் தடகளத்தில் அதிகம், கிரிக்கெட் போர்டில் குறைவு,

இந்த கருண் நாயரை கிரிக்கெட் வாரியம் ஜொலிக்க விட்டால் நல்லது.





கொசுறு


அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் என்ன செய்துகொண்டிருக்கின்றார்


"பட்டத்து அரசி இல்லாத இடத்தில் அடுத்த ராணி முடிசூடிகொள்வதில் என்ன தவறு?" என்ற முழக்கத்தோடு விரைவில் வரலாம்


"இதயக்கனி"யின் கட்சியில் "சமுத்திரகனி" போல நடிப்பில் எல்லோரும் பின்னிக்கொண்டிருக்கின்றார்கள்





ஒரு "தாமரைக்கனி" கூட இல்லை.






No comments:

Post a Comment