தலமை செயலாளரின் ஊழலையே, தன் அலுவலக ஊழலையே தடுக்கமுடியாத இந்த மாநில அரசு என்ன கிழித்துவிட போகின்றது?
இந்த 356வது சட்ட பிரிவு எல்லாம் சட்ட புத்தகத்தில்தானே இருக்கின்றது?
முன்பெல்லாம் அற்ப காரணங்களுக்காக கலைஞர் அரசு டிஸ்மிஸ் செய்யபட்ட காலங்கள் எல்லாம் கண்ணுக்குள் வருகின்றன
அந்த வகையில் மோடிக்கு இந்திராகாந்தியினை விட தைரியம் குறைவே அல்லது இந்திராவிற்கு மோடி பரவாயில்லை
மத்திய அரசு இருக்கட்டும, இந்த தமிழ் முதல்வருக்கு கொஞ்சமேனும் அவமானம், வெட்கம் எல்லாம் இல்லையா?
முதுகில் வேல்பாய்ந்தால் மானம் போய்விட்டது என நினைக்கும் அந்த மானம் எங்கே போனது?
முதுகில் குத்தினாலும் பரவாயில்லை, முதல்வருக்கு கீழ் இருந்த ராவ் வேறு எங்கோ அல்லவா குத்தி இருக்கின்றார்?
இனியும் அந்த பதவி எதற்கு என தூக்கி எறிய வேண்டாமா?
No comments:
Post a Comment