நாஸ்ட்ராடாமஸ் அப்படி சொல்லியிருக்கின்றார், இப்படி சொல்லியிருக்கின்றார் ஜெயா பற்றி சொல்லியிருக்கின்றார் என ஏக அழிச்சாட்டியம்
அப்படி ஒருவர் சுமார் 500 ஆண்டுகாலம் முன்பு இருந்தார், கிறிஸ்தவர் ஆனால் ஜோசியர், ஜாதகம் எல்லாம் அவருக்கு அத்துபடி. கண்ணில் பட்ட மனிதர் மட்டுமல்ல, ஆடு, மாடு, பன்றி உட்பட எல்லோரின் ஜாதகமும் கணித்தார்
அதன் பின் உலகின் ஜாதகம் பற்றி எழுதினார், அவர் வாழ்ந்த காலத்தில் அமெரிக்கா இல்லை, போப் ஆண்டவர்தான் உலக சக்கரவர்த்தி
பின்னாளில் உலகில் நிகழும் மாற்றம் பற்றி எழுதினார்
பிரிட்டானிய எழுச்சி, நெப்போலியன் எழும்பி போப்பாண்டவரை வீழ்த்துவது, கம்யூனிச புரட்சி, சோவியத் யூனியனும் அதன் வீழ்ச்சியும்
ஹிட்லர், அணுகுண்டு, இரண்டாம் உலகப்போர், பின்லேடனின் அமெரிக்க விளையாட்டு என பலவற்றை எழுதினார்
புதுநாடு ஒன்று உலகாளும் என அவர் சொன்னது அமெரிக்கா மூலம் பலித்தது
மிகசிறிய நாடொன்று அணுயுத்தமான மூன்றாம் யுத்தத்தை தொடங்குமென்றார், அது இஸ்ரேலாக இருக்கலாம் என்பது கணிப்பு
ஆனால் அவர் எழுதிய எதுவும் பொய்க்கவில்லை என்பதுதான் ஆச்சரியம், மனிதர் கோள்களின் சஞ்சாரத்தில் இப்படி எல்லாம் ஆட்சியாளர் வருவார்கள், இப்படி எல்லாம் நடக்கும் என அவர் எழுதியது அட்சம் பிசகாமல் நடந்தது
கோள்கள் மனிதனை ஆளும் என்பதில் உறுதியாக இருந்தார் நாஸ்ட்ரடோமஸ், இன்று இருந்திருந்தால் எப்போதோ போயஸ் கார்டன் இரண்டாம் மாடியில் அடைத்திருப்பார்கள்
உலகின் பல வருங்கால விஷயங்களை கணித்த அவர் இந்தியா பற்றியும் எழுதினார்
அதில் இந்திரா பற்றிய விஷயம் உண்டு, இரும்பு பெண்மணி கடல்சூழ் நாட்டில் கொல்லபடுவார் என எழுதியிருந்தார், அடுத்த அரசன் ஒரு வழிப்பறி கூட்டத்தால் கொல்லபடுவார் என்றும் எழுதியிருந்தார்
அது ராஜிவ் என்பது சொல்லிதெரியவேண்டியதில்லை, புலிகளை ஒரு வழிப்பறி கூட்டமாகவே நாஸ்ட்ரடாமஸ் கண்டிருக்கின்றார்
ஐந்து நதிபாயும் இடத்திலிருந்து நீல தலைப்பாகையோடு ஆட்சிக்கு வரும் ஒருவன் அந்த கடல்சூழ் நாட்டை வல்லரசாக்குவான் என்பதுதான் அவர் சொன்ன பெரும் கணிப்பு
மன்மோகன்சிங் அப்படி வந்தார், ஆனால் ஆண்டிமுத்து ராசாவும், கனிமொழியும் நாஸ்ட்ராமாடமஸுக்கே டிமிக்கி கொடுத்து அவரை கவிழ்த்தார்கள்,
திமுக என்பது நாஸ்ட்ராடாமஸுக்கே கணிக்க முடியா கட்சி
ஆக பஞ்சாபிலிருந்து இன்னொருவன் வந்து நாட்டை வல்லரசாக்குவான் என எதிர்பார்ப்போம், அது ராணுவ அதிகாரியாக கூட இருக்கலாம்
இந்த நாட்டின் மிக பெரும் பழம் மதத்தை (இந்து மதத்தை) ஐரோப்பா ஏற்கும், கிறிஸ்தவம் சுருங்கும் என்பதும் அவர் இந்தியா பற்றி சொன்ன விஷயம்
அதன் பின் அவர் குறிப்புகளில் இந்தியா பற்றி இல்லை, ஆனால் வருங்கால இந்திய குழந்தைகள் மிக்க அறிவுள்ளவர்களாக இருப்பார்கள் என ஒரு குறிப்பு உண்டு
அவர் குறிப்புகள் ஏராளமானவை , எல்லாம் ஒரு மாதிரியான செய்யுள் நடையில் எழுதியிருந்தார், எளிதில் புரியாது
காரணம் கிறிஸ்தவ சாம்ராஜ்யம் இந்த கணிப்புகளை அனுமதிப்பதில்லை, பால் தினகரனை பற்றி அவர் எழுதியிருந்தால் விட்டிருபபர்களோ என்னமோ
ஆக மிகுந்த சிரமத்துகிடையில் அதனை மொழிபெயர்த்துதான் இவ்வளவும் சொன்னார்கள், இன்னும் கண்டுபிடிக்கபடாத விஷயம் அவர் பாடலில் நிறைய உண்டு
அப்படிபட்ட பெரும் நாஸ்ட்ராடாமஸ் ஜெயாபற்றியும் சசிகலா பற்றியும் எழுதி இருக்கின்றாராம்? சில ஆடுகளை, ஓநாய்கள் பற்றி அவர் வாழும் நாளிலே கணித்தார் என்பார்கள், ஆனால் சசிகலா பற்றி எல்லாம் எழுதவே இல்லை.
அமெரிக்கா பற்றி, ஹிட்லர் பற்றி நிறைய இருக்கின்றது, விமானம், ராக்கெட் கூட உண்டு, இந்தியா பற்றி வருவது சொற்பம், ஆனாலும் வளமான எதிர்காலம் அதற்கு உண்டு என்றே சொல்கின்றார்
மற்றபடி எதுவுமில்லை இதில் சசிகலா சிக்கல் எங்கிருக்கின்றது?
பிரெஞ்ச் மொழி தெரிந்தோர் 4 வரி எழுதிவிட்டு இதுதான் நாஸ்ட்ரோடாமஸ் எழுதியது என நகர்ந்துவிடலாம், மொழிபெயர்ப்பவர்கள் ஆகா பார்தீர்களா சின்னம்மா மகிமையினை என கிளம்பலாம்
அப்படி எவனோ பிரென்ஞ்ச் மொழியில் சீரியசாக தமிழ்காமெடியினை சொல்லிவிட இங்கிருப்போர் மகா சீரியசாக காமெடி செய்கின்றனர்.
இவர்களை பற்றி எல்லாம் நாஸ்டரடாமஸ் எழுதியிருந்தான் என்றால் எப்பொழுதோ கொளுத்தியிருப்பார்கள், அவ்வளவு ஏன்? அவரே கல்லறையில் இருந்து எழுந்து வந்து எல்லா குறிப்புகளையும் கிழித்திருப்பான்
எவனோ பிரென்ஞ் மொழியில் சின்னம்மாவினை கலாய்த்ததையும் , மகா சீரியசாக சிந்தித்து பரப்புவர்களை என்ன செய்ய?
சரி அப்படியே நாஸ்ட்ராடாமஸ் தமிழக அரசியலை எழுதியிருந்தால் , சீரியசாக எழுதியிருந்தால் காமராஜரையும், கொஞ்சம் அச்சத்தோடு எழுதியிருந்தால் கலைஞரையும் பற்றி எழுதியிருக்கமாட்டானா?
அவர்களை எல்லாம் விட்டுவிட்ட அவன், இந்த மன்னார்குடி கும்பலைத்தான் எழுதுவானா?
அக்கட்சியினர் ஒரு மாதிரிதான், ஆனால் இவ்வளவு காமெடியர்கள் என இப்பொழுதுதான் தெரிந்தது.
இனி அகத்தியர் நாடியில் "மன்னர் குடி கொழுந்தொன்று, ராணியிடம் வேலைக்காரியாகி.." என தொடங்குகிறது என ஒப்பாரி வைப்பார்கள், அகத்தியர் கமண்டலத்தோடு இமயமலைக்கே ஓடினாலும் ஓடுவான்.
நாளயே கீதையில் கண்ணன் சொல்லியிருந்தான், ஓலைசுவடி நேற்றுதான் கிடைத்தது என்றால் நம்பிகொள்வார்கள்
நாடி ஜோசிபடி பூர்வ ஜென்ம விதிப்படி கையேயிதான் ஜெயலலிதா, மந்தரை தான் சசிகலா, எம்ஜிஆர்தான் தசரதன் . ஜாணகி கோசலை
கலைஞர் ராவணன் இதெல்லாம் பூர்வ ஜென்ம தொடர்ச்சி என எவனாவது ஒரு வைத்தீஸ்வரன் கோயில் பூசாரி கிளப்பிவிட்டாலும் இவர்கள் நம்புவார்கள்.
வாலியோ, சுக்ரீவன் வகையாறாவில் ஒன்று வைகோ என்றால் நாமே நம்பிவிடுவோம் வாய்ப்பு இருக்கின்றது.
விரைவில் மதுரை ஆதீனம் கனவில் சிவன் வந்து சசிகலாவிற்கு திருநீறு பூசலாம்
பைபிளின் பழைய ஏற்பாட்டில் மாவீரன் அலெக்ஸாண்டர் பற்றி சில குறிப்புகள் உண்டு, அப்படியே வருங்காலத்தில் ஒரு பெண் பாம்பினை நசுக்குவாள் எனவும் சில வார்த்தைகள் உண்டு ,
அது பின்னாளில் வந்த கிறிஸ்துவினை பற்றியது.
எமக்கு ஏற்படும் அச்சமெல்லாம்
பெங்களூர் சிறை முன்னும், அப்பல்லோ வாசலிலும் நின்று கத்திய அந்த கிறிஸ்தவ சாமியார்கள், அந்த பாம்பு கருணாநிதி, அந்த பெண் சசிகலா இதனைத்தான் பைபிள் சொல்லுகிறது என கிளம்பிவிட கூடாதே என்பதுதான்
No comments:
Post a Comment