நடிகைகளை பற்றி இந்த இயக்குநர் சுராஜ் என்பவர் ஏதோ சொல்லிவிட்டாராம்
உடனே நயந்தாரா, தமண்ணா உட்பட பலர் பொங்கிகொண்டிருக்கின்றனர்
இதுவரை இந்த நயனையும், தமணையும் பற்றி எழுதா பத்திரிகைகள் இல்லை, எவ்வளவோ எழுதினார்கள், இன்றும் எழுதுகின்றார்கள் அதெற்கெல்லாம் ஒரு சத்தமும் இல்லை
இன்று இவர்கள் கிளம்பியிருப்பது ஒரு வகையான திசை திருப்பல் போலவே தோன்றுகின்றது,
அதுவும் தன்னைபற்றி எழுதி கிழித்தவர்கள் மீது அமைதி காத்தவர்கள், இன்று பொங்குவதுதான் காமெடி.
பத்திரிகைகள் எழுதினால் கிசுகிசுவாம் கண்டுகொள்ளமாட்டார்களாம், ஆனால் இயக்குநர் ஏதும் சொல்லிவிட்டால் பிய்த்துவிடுவார்களாம்
நடிகை என்பது ஒரு தொழில், சினிமா தயாரிப்பு தொழிலில் அவர்களிடம் சில கோரிக்கைகள் வைக்கபடலாம், அது பற்றி சுராஜ் என்னமோ சொல்லிவிட்டார்
இதற்குத்த்தான் சிம்புவிடம் உதட்டை கடிக்க கொடுத்த நயன் பொங்கிகொண்டிருக்கின்றார்
அதாவது இந்த நடிகைகள் எப்படியும் நடிக்கலாம், கேட்டால் அதற்கான பதில் மக்கள் விரும்புகின்றார்கள், இயக்குநர் நடிக்க சொன்னார் அதனால் நடித்தோம், கதைக்கு ஏற்ற நடிப்பினை வழங்குவதே "கலைச்சேவை" என்பதாகவே இருக்கும்
அந்த "கலைச்சேவை"க்கும் ஒரு விலை உண்டு என்பதை சுராஜ் சொல்லிவிட்டாராம், இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம்
எதனையோ மறைக்க இன்று நயந்தாராவின் குரல் கேட்கின்றது, பொதுவாக நயன் இப்படிபட்ட நபர் அல்ல, எதனையும் கண்டுகொள்ளாத நயன் சுராஜினை கண்டுகொள்வதும், அதுவும் இன்றைய ரெய்டு காலத்தில் பதிலடி கொடுப்பதும் மர்மமானவை
ஆனால் ஒரு ஒற்றுமை
அன்று வெள்ளம் வரும்பொழுது சிம்புவின் பீப் சாங்
இன்று ரெய்டு நடக்கும்பொழுது நயந்தாராவின் கண்டன பதில்..
இதற்கு மேலும் நிலை சிக்கலானால் என்ன ஆகும்?
இருக்கவே இருக்கின்றார் தங்கர் பச்சான்
என் "கள்ளிகாட்டு கருப்பாயி" படத்திற்கு நடிக்க முடியாது என சொன்ன நயந்தாரா .." என அவர் கிளம்பினால் நிலை சிக்கல் ஆகாதா?
அதன் பின் எங்கு எந்த ரெய்டு நடந்தால் என்ன? யார் பொதுசெயலாளர் ஆனால் என்ன?
எப்படிபட்ட தமிழ்நாடு இது?
ஆனாலும் இது நயன் தாரா சம்பந்தபட்ட பிரச்சினை என்பதால், நயன் தற்கொலை படை நிறுவணர் மற்றும் தலைவர் Babu Rao பார்த்துகொள்வார்
ஆனால் குஷ்பூ ஏதும் சொல்வாரன்றால், அல்லது அவருக்கு பிரச்சினை என்றால் நாம் நிச்சயம் அவரைத்தான் ஆதரிப்போம்
No comments:
Post a Comment