Thursday, December 15, 2016

சிரியாவில் என்னதான் நடக்குது?

https://youtu.be/dkamZg68jpk


உலக அரசியல் எப்படி எல்லாம் அப்பாவி மக்களை கொல்லும் என்பதற்கு சிரியாவே பெரும் உதாரணம்


பெரும் நாடுகளின் சண்டைக்கு நடுவில் அது அழிந்துகொண்டிருக்கின்றது, சிரிய மக்களின் கதறலையும், அவர்களின் வீடுகள் விமானங்களால் நொறுக்கபட்டு நடுவீதியில் விரட்டபடுவதையும் காண சகிக்கவில்லை


ஒரு சிறிய நாடு, அதுவும் இனவாத அடையாளங்களை கொண்டநாடு தீவிரவாதத்திலும் அதன் எதிரொலியாக‌ வல்லரசுகளின் கையில் சிக்கிவிட்டால் என்னாகும் என்பதற்கு அதுவே உதாரணம்




புடின் இரும்புபிடியினை விடுவதாக இல்லை, அமெரிக்கா இன்னும் முழுமையாக களம் இறங்கவில்லை ஒரு மாதிரியான போங்கு ஆட்டத்தை அது ஆடிகொண்டிருக்கின்றது


சிரியாவின் அப்பல்லோ நகரமும், ஈராக்கின் மொசூல் நகரமுமே இன்று அதிகம் மக்கள் செத்துகொண்டிருக்கும் பகுதிகள்.


போரினால் ஒருபுறம், உண்ண ஒன்றும் கிடைக்காமல் மறுபுறம், குடிக்க நீரின்றி இன்னொரு புறம்.


சின்னம்மாவிற்கு பன்னீர்செல்வம் போல அமெரிக்காவிற்கு ஐநா சபை என்பது.


ஐநா சபை உட்பட யாரும் கவலைபட்டதாகவும் தெரியவில்லை


இனி அதிபராக பொறுப்பேற்றால் டிரம்ப் வேறு என்ன செய்வாரோ? அவர் முழுமையாக களமிறங்கினால் பெரும் விபரீதங்கள் ஏற்படலாம்


நமக்கு எவ்வளவோ சிக்கல், கரன்சி முதல் புயல் வரை பெரும் சிக்கல், அரசியல் முதல் ஆட்சி வரை பல வகையான இம்சைகள்


ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையோ, வாழ முடியாத நிலையோ இங்கு இல்லை. ஏதோ ஒரு வகையில் வாழ்ந்து விடலாம்.


இன்றைய தேதியில் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டுமானால்
என்னை சிரியாவிலும், ஈராக்கிலும் பிறக்க வைக்காதற்கு நன்றி என்பதை பெரும் நன்றியோடு சொல்லலாம்.


பாலஸ்தீன மக்கள் போராடி நொந்துவிட்டார்கள், சிரியா கிழிபட்டுகொண்டிருக்கின்றது, ஈராக் மிதிபட்டுகொண்டிருக்கின்றது


இன்னும் அரேபிய எண்ணெய் வளமும் அவர்களின் இயல்பான மூர்க்கமும் என்னவெல்லாம் செய்ய போகின்றதோ?


தகுந்த பாதுகாப்பும், மிகுந்த எச்சரிக்கையுமின்றி ஒருவனிடம் பெரும் செல்வம் குவிந்திருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு அரேபிய எண்ணெய்வளமே சாட்சி


வறுமையும் வெறுமையும் சில நேரங்களில் கொடுமை என்றாலும், பல நேரங்களில் அதுவேதான் பாதுகாப்பு.



No comments:

Post a Comment