நூறுவருடங்களுக்கு முன்னால் ரஷ்யா ஜார் மன்னனின் அழிச்சாட்டியத்தில் சிக்கி இருந்தது, கடும் கொடுமைகள்
அதிலும் ராணிகளின் ஆட்டமே படு அமர்க்களம், ஒரு மகுருவுடன் சேர்ந்து அவர்கள் அடித்த கொட்டம் வரலாற்று கொடுமை
அங்கேதான் செங்கொடி உயர்ந்து அந்த மன்னர்களையும், ராணிகளையும், அதிகார சக்திகளையும் உடைத்தெறிந்தது
உலகெல்லாம் கம்யூனிஸ்டுகள் உருவானார்கள், அதிகாரங்களை தூக்கி எறிந்து மக்களுக்கான அரசினை உருவாக்கினார்கள்
உலக கம்யூனிஸ்டுகள் லெனின் முதல் காஸ்ட்ரோ வரை அதனை செய்தார்கள்
தமிழக கம்யூனிஸ்டுகள் என்ன செய்கின்றார்கள், அன்று கம்யூனிஸ்டுகள் தூக்கி எறிந்த ராணி அரசாங்கத்தை மீண்டும் நிறுவ அரும்பாடு படுகின்றனர்
தோழர்கள் என சொல்லிகொண்டு கம்யூனிஸம் பேசியவர்கள், அக்காயிசம் பேசிய ஒருவரை ராணியாக்க வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்திருக்கின்றனர்
உலக கம்யூனிஸ்டுகள் எல்லாம் இப்படி சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
No comments:
Post a Comment