Tuesday, December 27, 2016

தமிழக நிலை என்ன?




நாட்டின் இன்றைய மகா முக்கிய பிரச்சினை கரன்சி மாற்றமும் அதனால் ஏற்படும் விளைவுகளும்


எந்த கட்சியாவது இதனை உருப்படியாக பேசுகின்றதா என்றால் இல்லை, பாஜக் கட்சி தலைவர்களே வண்டு முருகன் வடிவேலு போல "தத்தப்ப்பத்தப்ப்ப்" என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


தமிழக நிலை என்ன?


ப.சிதம்பரம் தனக்கே உரித்தான நிபுணத்துவத்திலும், அனுபவத்திலும் பின்னி எடுக்கின்றார். அழகாக அர்த்தமாக பேசி உண்மை நிலையினை உணர்த்துகின்றார், இன்னும் சில மகா பெரும் பிம்பங்கள் மணி சங்கர் அய்யர் போல உண்டு


பாஜகவின் தமிழிசை வாயினை திறந்தாலே சிரிக்க தோன்றுகின்றது, அர்த்தமுள்ள வார்த்தை ஒன்று கூட வராது, கோவை சரளா லெவலுக்கு சென்றாகிவிட்டது


அதிமுக நிலை இன்னும் பரிதாபம், ஆளும் கட்சிதான் ஆனால் முதல்வர் பன்னீர் செல்வத்தினை பார்க்கும்பொழுது ஜீன்ஸ் படத்தின் இன்னொரு நாசர் நினைவுக்கு வருகின்றார், கையில் அந்த புத்தகம் மட்டும் இல்லை


சி.ஆர் சரஸ்வதி எல்லாம் கட்சி பிரமுகராக பேசும் நிலை, இந்த பிரச்சினை பற்றி விளக்க அங்கும் ஆளில்லை, வரவும் மாட்டார்கள் வந்தால் அக்கட்சியில் இருக்கவும் மாட்டார்கள்


பாமக ராமதாஸ் உண்மையில் கொஞ்சம் விபரமானவர், அவர் சொல்லும் சில கருத்துக்கள் ஏற்றுகொள்ள கூடியவை. ஆனால் அங்கும் அன்புமணி தவிர உருப்படியாக யாருமில்லை, காடுவெட்டி குருவினை காட்டிவிட்டால் அவ்வளவுதான்


திருமா கட்சி பெரும்பாலும் அஞ்சலி கட்சி, யாருக்காவது அஞ்சலி செலுத்திகொண்டே இருப்பார்கள். திருமா சமூக பிரச்சினைகளில் சீறுவார், பொதுகருத்தில் சறுக்குவார். அங்கும் அவரை தவிர அடையாளமில்லை


வைகோ கேட்கவே வேண்டாம், மைதானத்தில் ஓடிகொண்டே இருந்தும் ஒரு ரன்னை எடுக்காதவனை என்ன சொல்லலாம், அவர் அப்படித்தான், ஓடிகொண்டே இருப்பார். அதாவது ஆட்டத்தில் இருக்கின்றாராம். யாரும் கண்டுகொள்ளத்தான் இல்லை


கம்யூனிஸ்டுகள் சிகப்பு கொடியில் கருப்பும் வெள்ளையும் கலந்து சின்ன அம்மா பக்கம் சாயும் காலம்


முன்பெல்லாம் பெரும் நாட்டு நலன் கருத்துக்கள் அவர்களிடமிருந்துதான் வரும், இப்பொழுதெல்லாம் காற்றுவாங்கிகொண்டிருக்கின்றார்கள்


திமுக இதில் மிகவும் சறுக்கி இருக்கின்றது, பாராளுமன்றத்தில் முழங்கிய அண்ணா, முரசொலிமாறனுக்கு பின் அங்கும் யாரும் தென்படவில்லை


இன்று முக ஸ்டாலின் காலம், ஆனால் பெரும் பேச்சாளர்களையும் பெரும் நிபுணர்களையும் வித்தகர்களையும் கொண்டிருந்த திமுகவிற்கு இப்பொழுது ஆளில்லை


மனுஷ்ய புத்திரன் என்றொருவரை எல்லாம் கொண்டு திரியும் சூழலில் அது சிக்கிவிட்டது


ஒன்று புரிகின்றது


நல்ல அறிவாளிகளும், படித்தவர்களும், சிந்தனையாளர்களும், நாட்டு நலன் முதல் எல்லாவற்றிலும் நிரம்ப அறிவும் அனுபவமும் கொண்டவர்கள் இப்போதைக்கு இளம் தலைமுறையாக ஒரு கட்சியிலும் இல்லை


அப்படி அரசியலை விட்டு அவர்கள் ஓட ஓட, கள்ளசாராய கும்பலும், கட்ட பஞ்சாயத்துகாரனும், நாலு வார்த்தை பேசதெரியாதவன் எல்லாம் கட்சியிலும் பதவியிலும் இருக்கின்றான்


ஒரு நல்ல சிந்தனையாளனும், பண்பாளனும் இளம் தலைமுறையாக ஒரு கட்சியிலும் இல்லை. இருந்தாலும் வெளிதெரிவதில்லை தெரியவிட மாட்டார்கள்


ஒரு நல்ல தலைவனை கூட உருவாக்காத இந்த கட்சிகள்தான் வளமான தமிழகத்தை உருவாக்குமாம், நம்பிகொள்ளுங்கள்


சிதம்பரம் மிக பெரும் திறமைசாலி, நன்கு படித்தவர். அவரை போல இன்னும் ஏராளமானோர் உண்டு


ஆனால் தமிழக முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவோர் பன்னீர் செல்வமும், சசிகலாவும்


பெரும் அழிவுகாலத்தை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கும், எவ்வளவு சீரழிந்துவிட்டது என்பதற்கும் இது பெரும் உதாரணம்


ஒன்று நன்றாக புரிகின்றது


1970களில் எல்லா கட்சிகளிலும் நல்ல வீரியமான அடுத்த தலைமுறை தெரிந்தது


இன்று அப்படி ஒரு நிலை இல்லவே இல்லை


ஒரு கருத்தை, நாட்டு நலத்தினை விவாதிக்க கூட அறிவுபெற்றவர்கள் இளைய தலைமுறையாக யாருமில்லை, உண்மை இதுதான்


ஆக இனி வருங்காலத்தில் ஒன்று தமிழகத்தை ஆண்டவன் காப்பாற்ற வேண்டும் அல்லது வங்ககடல் தன்னுள் எடுத்துகொள்ளவேண்டும்


ஆனால் அதற்குள் தமிழகம் விழித்துகொள்ளும் வாய்ப்பும் இருக்கின்றது, பார்க்கலாம்.








No comments:

Post a Comment