Friday, December 23, 2016

கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவில் பரவ முதல் காரணம் பால் அல்லது பவுல் என்பவர்...

கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவில் பரவ முதல் காரணம் பால் அல்லது பவுல் என்பவர்.


இப்பொழுது இருக்கும் சின்னம்மா அபிமானிகளை விட, மோடி வெறியர்களை விட, ஐஎஸ் இயக்கத்தாரை விட பெரும் வலுவான நம்பிக்கையினை தொடக்கத்தில் யூத மதத்தில் வைத்திருந்தார். அவர் யூதர், சாதரண யூதர் அல்ல யூத மதத்தின் 4000 மேற்பட்ட சட்டங்களை கரைத்து குடித்து குளித்து அடுத்த தலமைகுரு எனும் தகுதியில் இருந்தவர்


அப்பொழுது கிறிஸ்தவ மதம் யூதரில் பெரும் பிளவினை ஏற்படுத்த, அந்த கிறிஸ்தவர்களை ஒழிக்க இவர் சிரியாவிற்கு செல்லும் வழியில் எம்பெருமான் இயேசுவினால் ஆட்கொள்ளபட்டார், அதாவது பாதிவழியில் கண் குருடானது, இனி நீ கிறிஸ்துவிற்காய் வாழவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் கண் திறக்கபட்டது, பின் அவர் பெரும் போதகர் ஆனார்




அதுவும் இந்த பிரிவினை அல்லேலூயா கும்பல் வாயிலிருந்து வரும் பெரும்பான்மையான வசனங்கள் இவர் எழுதியதே


ஒரு கட்டுபாடும் இல்லா மதமாக கிறிஸ்துவத்தை காட்ட விரும்புவர்கள் காட்டும் வார்த்தைகளும் இவருடையதே


அப்படிபட்ட பவுலினை கிறிஸ்து குருடனாக்கி தடுத்தாண்ட இடம் இன்றைய சிரிய இஸ்ரேலிய எல்லையில் உள்ளது, பெரும் வெளிச்சத்தில் கிறிஸ்து தரிசனமானதும் அவர் கண் குருடான இடம் அது


அங்கு முன்பொரு தேவாலயம் இருந்தது, பின் இஸ்ரேல் சிரியாவினை ஆக்கிரமிக்கும் பொழுது அது இஸ்ரேலுக்கு வந்தது


சும்மாவே அவர்களுக்கு இயேசுவினை பிடிக்காது, பவுலையும் பிடிக்காது இருவரும் இன துரோகிகள்


இப்பொழுது நொறுக்கபட்ட அந்த ஆலயம், கிட்டதட்ட சீர்ழிந்து சிறுநீர் கழிப்பிடம் அளவுக்கு சென்றுவிட்டது


இதுதான் இஸ்ரேல் கிறிஸ்துவத்தை மட்டம் தட்டும் முறை, யாரும் செல்ல முயன்றால் அது பாதுகாப்பு தடுப்பு பகுதி என தடுத்தும் விடுகின்றது.


இங்கே வங்ககடல் ஓரம் நின்று இந்த பிரிவினை கிறிஸ்தவர்கள் "கடவுளே இஸ்ரேலை பாதுகாத்துகொள்ளும், அதற்கு வெற்றிகொடும்.." என கதறிகொண்டிருக்கின்றார்கள்


செம்மறி மந்தையினை விட மோசமான கூட்டம் இது.



No comments:

Post a Comment