கட்சிக்காக எதனையுமே செய்யாத , போய்ஸ் வீட்டை தவிர ஏதுமறியாத, தொண்டர்களிடம் ஒருநாள் கூட பேசாத சசிகலாவும்
12 வருடம் கட்சிக்காரர்கள் என்ன? ஜெயலலிதாவினை கூட சந்திக்காத தீபாவும்
இனி அதிமுக கட்சியினை கைபற்ற போராடுவார்களாம்.
இந்த சசிகலா என்ன தகுதியில் போராடுகின்றது என்றே குழம்பி தவிக்கும் போது, அந்த தீபா கொஞ்சமும் தகுதியின்றி நானும் உண்டு என்கின்றது
தகுதி இல்லா இரண்டு பேருக்கு இடையில் தகராறாம், எப்படி இருகின்றது கொடுமை?
டேய் எவண்டா அது, "நான் ஆணையிட்டால்னு"னு பாட்டு போடுவது?
எல்லாத்துக்கும் காரணம் அவரும் அந்த இரட்டை இலையும், அவருமே
நல்ல கட்சி அடையாளம், எல்லாமே இரட்டை
எம்ஜிஆர் ஜெயலலிதா
ஜெயலலிதா சசிகலா
சசிகலா நடராஜன்
இப்படி இரட்டையர்களால் ஆள்வதால் அது இரட்டையர் கட்சி
என்ன செய்யலாம்? விட்டால் இன்னொரு இரட்டையர் தொடர்ந்து வருவார்கள்.
அதனால்
அந்த இரட்டை இலையினை இரண்டாக பிரித்து சசிகலா கையில் ஒன்று, தீபா கையில் ஒன்று என கொடுத்துவிடுங்கள்
ஒற்றை இலையோடு அலையட்டும்
No comments:
Post a Comment