அது வேறு ஒன்றுமில்லை, சேர்க்கை சரியில்லாததால் வந்த குழப்பம், வைகோவோடு சேர்ந்த எல்லோரும் ஒரு மாதிரியாகத்தான் பேசுவார்கள்,
முன்பு புலிகள் பற்றி அடிக்கடி எனக்கு கிடைத்த தகவல் இது என பேசுவார் வைகோ, தகவல் எப்படி கிடைத்தது என்றால் சொல்லமாட்டார்
கொஞ்சநாள் சென்றால் திருமாவளவனுக்கு பித்தம் தெளிந்துவிடும்,
எப்படி இருந்த திருமாவினை இப்படி ஆக்கிவிட்டார் வைகோ.
திருநாவுக்கரசரை நியமிக்க எதிர்ப்பு: 39 மாவட்ட தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு கடிதம்
ஒரு கட்சிக்குள் ஓராயிரம் கட்சிகள் உண்டென்றால் இந்த பூமியில் காங்கிரஸ் மட்டுமே, இத்தனை ஆயிரம் ஓட்டைகள் இருந்தும் இன்னும் அது ஓரளவு நிலைத்திருப்பதே இந்த உலகின் பெரும் அதிசயம்.
இன்னும் தலைவரே அறிவிக்கபடாத நிலையில் அவர் வேண்டாம் , இவர் வேண்டாம் என ஓராயிரம் கடிதங்கள் டெல்லிக்கு எழுதபட்டிருக்கும்
தமிழகத்திலிருந்து யாரையாவது தமிழக காங்கிரசுக்கு தலைவராக நியமித்தால்தானே பிரச்சினை, பேசாமல் வடநாட்டுக்காரன் யாரையாவது நியமித்தால் என்ன எனும் அளவிற்கு மேலிட தலமை கடும் சிந்தனையில் இருக்கலாம்
சோலார் பேனல் மோசடி வழக்கில் பழனி மாணிக்கத்திற்கு தொடர்பு: சரிதா நாயர்
# மொத்தமாக மன்மோகன் சிங் அமைச்சரவையிலிருந்த எல்லா திமுக அமைச்சர்களையும் டெல்லியில் கொண்டுபோய் விட்டுவிடுவது அறிவாலயத்திற்கு நல்லது, அழகிரியும் விடபடுவதால் கூடுதல் நலம்
# வடக்கே இருந்து யாரும் குற்றம் சாட்டினால் ஆரிய சதி என சொல்லும் கலைஞர், இப்பொழுது முன்னாள் திராவிட நாட்டு பகுதியிலிருந்தே குற்றசாட்டு கிளம்பி இருப்பதை "திராவிட சதி" என சொல்ல முடியாதே :)
No comments:
Post a Comment