Sunday, July 24, 2016

கபாலி :மலேசிய தமிழர் கருத்து

இன்று ஒரு மலேசிய தமிழர் பேசினார், மனிதர் உலகம் அறிந்தவர். மலேசிய நாட்டுபற்று அவரிடம் எப்பொதும் சக தமிழர்களை போல ஓங்கி தெரியும்

என்ன படம் இது, சரியாக புரிந்துகொள்ளாமல் ஒரு தலைபட்சமாக எதனையோ வலுகட்டாயமாக திணிக்கபட்ட படம்போல் தெரிகின்றதே தவிர, உண்மை இது அல்ல‌

இதோ எங்கள் நாட்டில் 15 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர், இன்னும் அனுமதித்தால் குவிந்து விட வங்க, பிலிப்பைனிய, இந்தோணிசிய, பர்மீய, வியட்நாம் நாட்டவர்கள் ரெடி, அத்தனை வேலைவாய்ப்பு கொட்டி கிடக்கின்றது

இதனையும் காட்டி இருக்கவேண்டுமல்லவா? அதனை சொல்லிவிட்டு,, இத்தனை வசதிகள் இருக்கும் தேசத்தில் இப்படியும் ஒரு பக்கம் உண்டு என்றல்லவா வெறும் போதை பழக்கத்தையும், மற்ற இருண்டபகுதிகளையும், சில சர்ச்சைகளையும் காட்டியிருக்க வேண்டும்? என்றார்

எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, டைரக்டரிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா?, என்னிடம் ஏன் என்றேன்

இல்லை வாய்பிருந்தால் நிச்சயம் கேட்பேன் என்றார், அவர் சொன்னதிலும் ஒரு நியாயம் இருக்கலாம்.

1 comment:

  1. நிச்சயம்...தமிழர்கள் வாய்ப்பை பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

    ReplyDelete