இலங்கை அதிபர் மைத்ரி சிரிசேனாவின் மனைவி யாழ்பாண தமிழ்பெண். அதாவது இலங்கை தேசத்தின் முதல் குடிமகள் ஒரு தமிழச்சி, அதுவும் ஈழ தமிழ்பெண்
எங்கிருந்தாவது அவர் ஒரு தமிழின துரோகி, சிங்களவனை மணந்தவள் மானமிக்க தமிழச்சியாக இருக்கமுடியாது என சத்தம் வருகின்றதா? வராது.
அங்கிளின் பாய்ஸ், ம்ம்மேஏஏஏஏஏ .. 17 எனும் ஆட்டு மந்தை இயக்கம் போன்றவர்களுக்கெல்லாம் இன்னும் சரியாக தெரியாது போல (அவர்களுக்கு எதுதான் ஒழுங்காக தெரியும்), தெரியும் பட்சத்தில் இவர்கள் முழக்கம் எப்படி இருக்கும்?
குடும்பத்தில் குழப்பம் உண்டாக்குவது போல இருக், தமிழருக்கு தனி உரிமை கொடுக்கா மைத்ரிபாலாவிற்கு தமிழ்பெண் மட்டும் வேண்டுமா? நல்ல மானமுள்ள சிங்களன் என்றால்...... என பலவாறு முழ்ங்குவார்கள்.
மைத்ரிபாலாவின் மனைவி ஜெயந்தி கம்யூனிஸ் கோட்பாடில் ஈடுபாடு கொண்டவர், அதில் ஈர்க்கபட்ட மைத்ரிக்கும் அவருக்கும் காதல் மலர்ந்திருக்கின்றது, இருவருமே மார்க்ஸ்,லெனின், சே குவேரா போன்றோரை நேசிப்பவர்கள்
நமக்கு கவலை என்னவென்றால், அங்கிள் சைமன் மட்டும் 2005ல் இருந்தது போல மார்க்ஸ் பேரனாகவோ, சே வின் டிசர்ட் போட்ட தம்பியாகவோ இருந்திருந்தால் இந்நேரம் மைத்ரிபாலா தம்பதியரின் பாடி கார்டாக மாறி இருப்பார், ஆனால் என்ன செய்ய அதன் பின் பிரபாகரனின் தம்பியாக மாறி, அதனையும் துறந்து இன்று நம்மாழ்வாரின் தற்காலிக சீடராகிவிட்டார்.
ஆனாலும் மைத்ரி பெருந்தன்மையானவர், இந்நாளளவும் யாழ்பாண தமிழச்சியினை மணந்த தமிழன்நான் என எங்கும் வோட்டுக்காக ஒருவார்த்தை சொன்னதாக தெரியவில்லை, அங்கு நிற்கிறார் மனிதர்
No comments:
Post a Comment