Tuesday, July 19, 2016

கலைஞர் வீட்டுக்கு கங்கை நீர் அனுப்பும் போராட்டம்

கலைஞர் வீட்டுக்கு கங்கை நீர் அனுப்பும் போராட்டம் : இந்து முண்ணணி அறிவிப்பு

கலைஞருக்கு வயதாகிவிட்டது, பழைய கலைஞர் என்றால் எப்படி சீறுவார் தெரியுமா?

அந்த பார்பனிய அரசு, அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் பிரசாதம் ஊட்டிவிட்டு, இந்திய மக்களுக்கெல்லாம் காசி அல்வாவினை மறைமுகமாக ஊட்டிவிட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சில பார்பனிய கூலிகள் எனக்கு கங்கை நீரை அனுப்பபோகின்றதாம்


காவேரியில் ஆடி மாத நீர் வரவில்லை, ஆடிபெருக்கு விழாவிற்கு கூட நீர் இல்லை அதனை மத்தியா அரசிடம் கேட்க தெரியா கோட்டான்கள், மைசூர் மாதரசியிடம் முறையிட பயந்த முட கூட்டங்கள் இந்த சூத்திரனிடம் மட்டும் சாடுவது வடிகட்டிய வஞ்சகம், கூடி செய்த சதி.

இதே சென்னைக்கு ஆந்திராவிலிருந்து கால்வாய் வெட்டி கால்வாயினை வெட்டி, அதற்கு தெலுங்கு கங்கை என பெயரும் சூட்டி சென்னையின் தாகம் தணிக்கபடவேண்டும் என 1970களிலே சொன்னவன் இந்த கருணாநிதி

அப்படி தெலுங்கு கங்கை நீரை மொத்த சென்னைக்கும் கொண்டுவந்த கழக எண்ணம் எங்கே?, எனக்கு மட்டும் கங்கை நீரை கொடுக்கும் இவர்கள் எங்கே

கல்கத்தா கங்கை நதியோரம் பிறந்த விவேகானந்தருக்கு குமரியில் சிலைவைத்தபோது திமு கழகம் அனுமதித்தது, அருகே அய்யன் வள்ளுவனுக்கும் சிலை அமைத்தது, ஆனால் இன்றோ தமிழ் தலைமகனின் சிலையினை கங்கை கரையிலே அமைக்க முடியவில்லை என்றால் இது பார்பானிய, ஆரிய அரசே அன்றி வேறு இல்லை.

தமிழழின் பெருங்கடலில் வங்காளத்தவருக்கு சிலை இருக்கும் நாட்டில் கங்கை கரையில் தமிழனுக்கு சிலை வைக்க முடியாவிட்டால் இது மத, இன சார்பற்ற நாடா? அல்லது மதவெறி செந்நாய்களும், நக்கி பிழைகும் நரிகளும் வாழும் காடா?

அப்படி திராவிடரும் இந்தியர் என கருதுவீர்களானால், இந்திய சமத்துவ செயல்வீரர்களானால் கங்கை காவிரியினை இணைத்து, அந்த பெரும் கங்கையினை தமிழகத்திற்கு அழைத்து வாருங்கள். அப்பொழுது தமிழரில் ஒருவராக நானும் அந்த நீரில் குடிக்கிறேன், குளிக்கின்றேன்.

அதனை விட்டு எனக்கு மட்டும் கங்கை நீர் தந்தால் ஏற்க மாட்டான் இந்த கருணாநிதி, அது கவரில் வந்தாலும் சரி, கண்டெய்னரின் வந்தாலும் சரி

கண்டெய்னர் என நான் சொல்ல காரணம், தற்போது ஆயிரகணக்கான கோடிகளுடன் கண்டெய்னர்கள் பிடிபடுகின்றதாம், உங்களுக்கு புரியும்

அப்படி பல்லாயிரம் கோடி பணம் கொடுத்து குடிக்க சொன்னாலும், தமிழர் தாகமாய் இருக்க நீ மட்டும் கங்கை நீர் குடி என கொடுத்தாலும், மன்ன(னா)ர் குடி கும்பலே அதாவது அரசாளும் கும்பலே குடித்தாலும்,

தமிழன் தாகமாயிருக்க ஒரு சொட்டு சுயநலமாக குடிக்கமாட்டான் இந்த பெரியார் தொண்டன்.

No comments:

Post a Comment