"வைகோவிடம் கொள்கை முரண்பாடு ஏற்பட்டதால் விலகுகிறோம். அவரைப் பற்றி இப்போதுதான் புரிந்து கொண்டோம்' என்கிறார் தமிழர் முன்னேற்றபடை வீரலட்சுமி.
பிரபாகரன் படத்தினை பிடித்து கோஷமிட்ட பொழுதே உங்களை தமிழகம் புரிந்துகொண்டது வீரலட்சுமி, அந்த படம் பிடித்த வைகோ, சீமான், வரிசைதான் உங்களுக்கும், இதில் வைகோவினை நீங்கள் புரிந்துகொள்ள என்ன இருக்கின்றது,
முதலில் இருவருக்கும் என்ன கொள்கை? அப்படி ஒன்று இருந்தால்தானே வரும் முரண்பாடு?
பிரபாகரனுக்கு சிலை இல்லா தமிழகத்தில் சோபன் பாபு சிலை ஏன்? அகற்றாமல் ஓயமாட்டேன் என்றீர்கள். சிலை அப்படியேத்தான் இருக்கின்றது, உங்களை காணவில்லை
விஜயகாந்தோ, வைகோவோ சொன்னால் ஒரு அர்த்தமுண்டு, சந்தடி சாக்கில் நீங்களும் சொல்வதுதான் கடும் காமெடி.
அக்காவின் போராட்டம் நடைபெறும் படங்களை பார்த்தால் அது விளம்பர பட சூட்டிங் ஸ்பாட் போலவே இருக்கும்,
ஆடையலங்காரத்துடன் இவர் கொடுக்கும் போஸ் அப்படி , அதுதான் போராட்டம் என நம்பிகொண்டாரோ என்னமோ?
பவர் ஸ்டார்கள் அரசியலில் இருக்ககூடாது என்பது சட்டமா என்ன?
No comments:
Post a Comment