Tuesday, July 12, 2016

குமரி மாவட்ட துறைமுகம் .....

இங்கு Suhir Pal ஒரு நண்பர் மிக கடுமையாக வருத்தபடுகின்றார், அதாவது இணயம் எனும் குமரி துறைமுகம் கடற்படை தளமாக அமைக்கபடுகின்றதாம், இனி பெரும் ஆபத்து தென்னகத்திற்கு வருமாம், அன்னார் பதைபதைக்கின்றார்.

இவர் இவ்வளவு நாளும் அண்டார்டிக்கா பனிகரடியாக தூங்கிவிட்டு திடீரென வந்து என்னது? இந்திராகாந்திய கொன்னுட்டாங்களா? என கேட்டால் கூட இவ்வளவு ஆச்சர்யம் வராது.

விஜயநாராயண கடற்படை தளம், கூடங்குள அணுவுலை, மகேந்திரகிரி எரிபொருள் தளம், சற்று தள்ளி திருவனந்தபுரம் அருகே ராக்கெட் மையம் இன்னும் விரைவில் அமையவிருக்கும் குலசேகரபட்டின ராக்கெட் ஏவுதளம் எல்லாம் வந்த பின் அன்னார் திடீரென் வந்து இந்த துறைமுகத்தை எதிர்க்கின்றாராம்.


[gallery ids="1309,1308" type="columns"]

அதாவது ஏற்கனவே கடும் பாதுகாப்பும், ஆபத்தும் உள்ள திட்டங்களில் சிக்கியுள்ள பகுதி இது, பஞ்சாப் போல, ராஜஸ்தான், காஷ்மீர் போல எல்லையோர மாகாண சிக்கல் இது, முதலில் எதிர்த்திருக்கவேண்டிய நேரத்தில் அண்ணா வாழ்க, எம்ஜிஆர் வாழ்க, கலைஞர் வாழ்க, அம்மா வாழ்க என சொல்லிகொண்டும், ரஜினி கமலுக்கு போஸ்டர் ஒட்டியும் வாழ்ந்தாகிவிட்டது

இலங்கையில் அமைந்திருக்கவேண்டிய இந்திய தளத்தையும் புலிகள்,ஈழம், தனிதமிழ் , அமைதிபடை அட்டகாசம் என சொல்லி விரட்டியாயிற்று, பின் எங்கு அமையும்? இங்குதான் அமையும்.

அன்னாரின் கன்னியாகுமரி தொகுதிதான் அணுவுலை போராளி உதயகுமாரினை தோற்கடித்து, தூங்கும் தலைவன் பொன் ராதாகிருஷ்ணனை பாரளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தது, ஒருவேளை உதயகுமார் வென்றிருந்தால் இம்மாதிரியான திட்டம் மறுபரீசீலனைக்கு ஆகலாம். குறைந்தபட்சம் அணுவுலையாவது சிக்கலுக்கு வந்திருக்கும்.

தெற்கே இங்கிலாந்தின் டீகோ கார்சியா தீவிலிருந்து அமெரிக்க ஒப்பந்த காலம் முடிகிறது, அது இலங்கை அல்லது மால்த்தீவில் காலூன்றலாம், சீனாவும் அதே முயற்சியில் உள்ளது, அப்படி அமையும் பட்சத்தில் வலுவான கடற்படை தளம் தெற்கே தேவை, அதற்காக கல்கத்தா அருகேயோ குஜராத்திலோ கட்டமுடியாது, இங்குதான் கட்டமுடியும்

இணயம் மட்டுமல்ல இன்னும் பல திட்டங்கள் வரும், வந்தே தீரும், இதனை தவிர்க்கத்தான் 1987லே இந்தியா திட்டம் தீட்டிற்று

அதாவது இலங்கையில் இந்திய ராணுவதளம் அமையபெற்றால் இந்த எண்ணிக்கை குறையும், அமைதிபடை அனுப்பபட்டது அந்த காரணத்தை குறிவைத்தே தான், இதனை உணர்ந்த அன்னிய சக்திகளின் தூண்டல்தான் இந்திய ராணுவத்தின் மீதான கற்பழிப்பு பழியும் விரட்டலும்

நாட்டின் பாதுகாப்பு தேவை மிக கட்டாயம், அதுவும் அணுவுலை பகுதிகளுக்கும் விண்வெளி ஆராய்சி மைய நிலையங்களுக்கு அருகே அது மிக அவசியம்.

ரோடு, ரெயில் எல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் விடலாம், இணயம் போலவே கேரளத்தின் கொச்சி போன்ற பல பகுதிகளுக்கும் பாதிப்பு உண்டு

உங்களுக்கு என்னவேண்டும்? எல்லா தளங்களும் பஞ்சாபிலும், காஷ்மீரிலும், ராஜஸ்தானிலும் அமையவேண்டும், அவர்கள் எல்லாம் சாக வேண்டும், நாமெல்லாம் அமைதியாக வாழவேண்டும், அப்படியே தந்திரமாக இலங்கையில் நுழைந்தாலும் தமிழனை இந்தியா கொல்கிறது என ஒப்பாரி வைக்கவேண்டும்

அதாவது அவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள், பிழைக்கதெரியாதவர்கள், தமிழர்கள் மட்டும் விவரமானவர்கள் அப்படியா?






சுஹிர் பால் பதிவு

குமரி மாவட்டம் இனயம் என்ற இடத்தில் வரவிருப்பது வர்த்தக துறைமுகம் இல்லையாம், கடற்படை துறைமுகமாம்

இலங்கையில் சீனா போன்ற நாடுகள் தங்களது தளங்களை அமைக்கும் போது, இந்தியா பதிலடி கொடுப்பதற்கு ஒர் கடற்படை துறைமுகம் தேவையாம்

அதற்காக தான் வர்த்தக துறைமுகம் என்று குமரி மாவட்ட மக்களை ஏமாற்றி, இந்த போர்தளத்தை அமைக்கிறதாம் மத்திய அரசு.


கடற்படை போர்தளமும் தேவையானது தான். ஆனால் மிக அடர்த்தியாக மக்கள் வாழும் குமரி மாவட்டத்தில் கப்பற்படை தளம் அமைப்பது மிக மிக முட்டாள்தனமே.

(மக்கள் நெருக்கம் அதிகமில்லாத கடற்ப் பகுதியை தேர்ந்தெடுத்து, அந்த பகுதியில் வசிக்கும் ஒருசில மக்களையும் பாதுகாப்பான பகுதியில் குடியமர்த்தி தான் இப்படிபட்ட திட்டங்கள் நிறைவேற்றபட வேண்டும் )

ஒருவேளை இத்தளத்தில் போர்க்கப்பல்களை இந்தியா குவிக்கும் போது, எதிரி நாடுகள் இந்த தளத்தை நோக்கியே தாக்கும்.

மிக நெருக்கமாக வாழும் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் பகுதி மக்கள்களின் நிலமை???????????

கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் வாழ் மக்களே உஷார்

நிச்சயமாக இனயத்தில் வரவிருப்பது வர்த்தக துறைமுகமல்ல...

உங்கள் சிந்தனைக்கு :-

1,குமரி நெல்லை திருவனந்தபுரம் பகுதிகளிலிருந்து என்ன பொருள்கள் கப்பல் கப்பலா ஏற்றுமதியாக காத்திருக்கிறது?

2, கப்பல் கப்பலா இறக்குமதி செய்வதற்கு பொருள்கள் தேவைபடுகின்ற கம்பெனிகள் இங்கு உள்ளனவா?

3, அவ்வாறு சிறு தேவைகள் இருந்தாலும் அருகாமையில் தூத்துகுடி துறைமுகம் மற்றும் மிக அருகாமையில் விழிஞ்சம் துறைமுகங்கள் உள்ளனவே

4, ஏன்? ஏன்? ஏன்? ஏன்?
மதுரை To திருவனந்தபுரம் இரட்டை இரயில்வே சாலையை நிறைவேற்ற நிலம் கையகபடுத்த முடியாத அரசு, (இது நிறைவேறினாலே சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து எளிதாகும்)

காவல் கிணறு To களியக்காவிளை நான்கு வழிச் சாலையை நிறைவேற்றிட நிலம் கையகபடுத்த முடியாத அரசு.

குமரி மாவட்ட மக்களுக்கு பயனளிக்காத, குமரி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிற
இனயம் துறைமுக திட்டத்தை அவசரமாக கொண்டு வர முயல்வது ஏன்?-

No comments:

Post a Comment