Tuesday, July 19, 2016

ரிலையன்ஸ் : வராத கடன்களை வசூலிக்கும் கட்ட பஞ்சாயத்தான்.....





மதுரை, அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் இலெனின் பெற்ற கல்விக்கடனுக்காக அவரின் குடும்பத்தினரை தொலைபேசியில் ரிலையன்சு கும்பல் மிரட்டியதையடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டார் : மாணவர் இயக்கங்கள் போராட்டம்

கல்வி என்பது ஒரு அரசு வழங்க கூடிய அடிப்படை உரிமை, ஆனால் வணிகமயமான கல்வி எடுத்துகொண்டிருக்கும் நரபலிகளில் இந்த கொலையும் ஒன்று

எத்தனையோ தொழில்நடத்தும் ரிலையன்ஸ் குழுமம், வராத கடன்களை வசூலிக்கும் கட்ட பஞ்சாயத்து தொழிலில் இறங்கி இருப்பதும், இதற்கு அரசு ஆதரவளித்திருப்பதும் மகா கொடுமை.


விரைவில் இந்த ரிலையன்ஸ் விவசாய கடன்களையும் இப்படி வசூலிக்க இறங்கினால் எல்லா நிலமும் அவர்களுக்கு செல்லும், வாகனங்களும் செல்லும். ஒரு கட்டத்தில் அந்நாளைய கிழக்கிந்திய கம்பெனியாகவே ரிலையன்ஸ் மாறலாம்.

இதனை எல்லாம் அடக்கி வைக்கவேண்டிய மத்திய அரசோ, இவர்களுக்காக உலகம் முழுக்க சந்தை பிடித்துகொடுத்துகொண்டிருக்கின்றது, இந்தியாவில் இன்னும் பெட்ரோல் விலை உச்சத்தில் இருக்க காரணமும் இவர்களே

இந்தியா இந்தியருக்கு என்பது போய், இந்தியா குஜராத்தியருக்கு எனும் கோஷம் உருவாகிகொண்டிருக்கின்றது

நிச்சயம் இது கண்டிக்கதக்கது

எத்தனை ஆயிரம் கோடிகளை சுருட்டிவிட்டு ஓடிய மல்லையாவிடம் என்ன வசூலித்துவிட்டார்கள்? எத்தனை கோடீஸ்வர தொழிலதிபர்கள் மஞ்சள் கடிதாசி கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக உலா வருகின்றார்கள்?

இறந்துபோன மாணவனின் பெயர் லெனின்

அம்மாமனிதனின் கொள்கைகளின் தேவை மானிட குலம் இருக்குமளவும் தேவைபடும் என்பதைத்தான் உலகம் உணர்ந்துகொண்டிருக்கின்றது

ஒரு காலத்தில் வங்கிகளின் அழிச்சாட்டியம் தாளாமல் அவற்றை தேசிய மயமாக்கியது காங்கிரஸ் ஆட்சி

அவற்றை மறுபடியும் தனியார் மயமாக்கிகொண்டிருக்கின்றது மோடி அரசு

சோனியாவோ, காங்கிரசோ ஒரு சிரமும் படவேண்டாம். மறுமுறை காங்கிரசுக்கு அமோக வெற்றி தர மோடியே தீவிரமாக ஓடி ஓடி உழைத்துகொண்டிருக்கின்றார்.

அதுவும் உலகெல்லாம் ஓடி







No comments:

Post a Comment