Saturday, July 30, 2016

சிதறல்கள்

பாலாற்று தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை , இனியாவது விழிக்குமா அரசு : அன்புமணி சாடல்

அதாகபட்டது தாழ்த்தபட்ட சாதிக்காரன் காதல் திருமணம் செய்து சர்ச்சைகுரிய "தற்கொலை" செய்தால் அரசு தூங்கட்டும் என விட்டுவிடுவார், ஆனால், விவசாயி செத்தால் மட்டும் அரசினை விழிக்க சொல்வார்

எந்த சாதி விவசாயி என்பதை அன்னார் விரைவில் சொல்வார் என எதிர்பார்க்கலாம், பொதுவாக வன்னிய விவசாயிகளை தவிர யாருக்கும் இந்த அன்புமகன் வாய்திறப்பதில்லை




கர்நாடகாவில் இன்று பந்த், மகதாயி நதியினை மராட்டியத்துடன் பகிர்ந்துகொள்வதை கண்டித்து வாட்டாள் நாகராஜ் தலமையில் பந்த் ஆர்பாட்டம்

வாட்டாள் நாகராஜ் எனும் கன்னட வெறியருக்கு தண்ணி ராசி, எங்காவது நீரை பங்கிட வேண்டும் என்றால் பொங்கிவிடுவார். ஆந்திரா, தமிழத்தை தொடர்ந்து இதோ மகாராஷ்ட்டிரத்திடம் மல்லு கட்டுகின்றார்.

தமிழகத்திற்கு எதிராக இவர் பேசிய பேச்சுக்கள் சாதரணமானவை அல்ல.


கன்னட மக்கள் ஒரு வகையில் வித்தியாசமானவர்கள், என்னதான் கன்னடர் நலம், கன்ன்ட வெறி என கத்தும் இம்மாதிரி சண்டியர்களை தெருக்கத்தலுக்கு மட்டும்
அனுமதிப்பார்களே தவிர

ஒரு போதும் ஆட்சிக்கு அல்ல.

அவ்வகையில் தனித்து நிற்கிறது கன்னடம்




 

No comments:

Post a Comment