Wednesday, July 27, 2016

சிதறல்கள்

மராட்டிய மண்ணின் மைந்தரான ரஜினிக்கு , மராட்டிய கெய்க்வாட் எனப்படும் சாதியில் பிறந்து முத்திரை பதித்த அவருக்கு

மராட்டிய அரசின் பூஷன் விருதை அளித்துவிட்டு பாரத ரத்னா விருது வழங்கவும் பாடு பட‌ வேண்டும்: மராட்டிய எம்.எல்.ஏ அனில் கோடே

ஒரு மனுஷனுக்கு கிரகம் சரியில்லணா கஷ்டம் மொத்தமாக வருமாம், அவரே கபாலி வெற்றிபடம்னு தனியா சிரித்து சமாளித்துகொண்டிருக்கின்றார், இதில் இதுவேறா?


அவர் கன்னடனா? தமிழனா என கயிறு இழுத்து போராடும் நிலையில், ரஜினியே நான் கோட் போட்ட தமிழன் என மார்தட்டிய புரட்சி நிலையில் இவர் இப்படி கிளம்பினால் என்ன ஆகும்? ரஜினிக்கு சிக்கல்தான்.

ரஜினி தமிழர், தமிழ்போராளி என சொல்பவன் எல்லாம் இனி சும்மா இருக்க முடியுமா? விடுவார்களா?

ஜெய்க்வாட் ஜாதியில் பிறந்தவரை வைத்துதான் தலித் அரசியல் படம் எடுக்கமுடியுமா? என கேட்க ஒருவனுமா இல்லை? இதனை எல்லாம் நாமும் கேட்க கூடாது

சரி, அப்படி ரஜினி நடிப்பில் என்ன உச்சம் கண்டுவிட்டார் மராட்டிய அமைச்சர்?
, ஓஓஓ அதுவாகத்தான் இருக்கும், நிச்சயம் அதுவேதான்

அதாகபட்டது கபாலி பெருவெற்றிபடம் என கூசாமல் அறிக்கை விட்டார் அல்லவா? ரஜினி. அந்த நடிப்பிற்கு ஆஸ்காரே கொடுக்கலாம், எப்படிபட்ட நடிப்பு அது?





அது எப்படி 1200 பள்ளிகளை மூடலாம் என கிளம்பிவிட்டார்கள், ராஜாஜி மூடியது போல இதுவும் என கிளம்பி கொடிபிடிக்க வந்தாயிற்று.

காலம் எவ்வளவு மாறிவிட்டது என்பதனை மட்டும் மறந்துவிடுகின்றார்கள், ராஜாஜி காலத்தில் தனியார் ஆங்கில பள்ளிகள் முகநூல் போராளிகள் போல இப்படியா இருந்தது? இத்தனை ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தார்களா?

இன்று ஆங்கில பள்ளிகள் என்ன? மூலை முடுக்கு, சாக்கடை பொந்து , முட்டு சந்து, நடுகாடு, சுடுகாடு என சகலமும் அது நிறைந்திருக்கின்றது, எல்லாம் தனியார் பள்ளிகள்.


அப்படியானால் அரசு பள்ளிகளில் யார் இருப்பார்? ஆசிரியர், சத்துணவு பணியாளர். இவர்களுக்கா பள்ளி திறந்து வைப்பார்கள்?

போராடுபவர்கள் தனியார் பள்ளிகளை அனுமதித்த அரசினை எதிர்க்கவேண்டும், கல்வி கட்டணங்களை கொள்ளையிடும் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும் என போராடவேண்டும்

டாஸ்மாக்கினை எடுத்து நடத்தும் அரசுக்கு, தனியார் பள்ளிகளை எடுத்து நடத்த எவ்வளவு நேரமாகும் அப்படியானால் எல்லாம் அரசு பள்ளி அல்லவா? பின் எதனை மூடினால் என்ன திறந்தால் என்ன? எல்லாம் அரசுக்கே

இதனை சொல்லமாட்டார்கள், சொன்னால் ஜெயலலிதாவோடு சேர்ந்து கலைஞரையும் கிழிக்கவேண்டி இருக்கும், காரணம் சீரழிவிற்கு காரணம் இவர்கள் இருவருமே

இதனை சொன்னால் நான் காங்கிரஸ்காரன், ஆர்எஸ்எஸ், இப்பொழுது புதிதாக பிராமண பட்டம் வேறு




 

No comments:

Post a Comment