Sunday, July 24, 2016

முடிஞ்சுடா‬.................

இனி கபாலி கதை பற்றி எழுத‌ வேண்டாம் என முடிவெடுத்தபொழுது, மலேசிய அமைச்சரின் அறிக்கை வானொலியில் வந்தது, அதாவது கபாலி எனும் சினிமாவினை சினிமாவாக மட்டுமே பார்க்கவேண்டும் என்றும், நிஜம் அதற்கு வெகு தூரம் என்றும், இதுமாதிரியான படங்கள் வந்திருப்பது துரதிருஷ்டவசமானது என்றும் அவர் சொல்லி இருக்கின்றார்

பலஇன மக்கள் கலந்துவாழும் நாட்டில் இம்மாதிரியான படங்கள் தவறான சர்ச்சைகளை உருவாக்கிட கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

அமைச்சர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடதக்கது.


இது எம்மை பின்பற்றுபவர்களுக்கு முன்பே தெரிந்ததுதான், நாம் ஏற்கனவே சொன்னதுதான். நாட்டின் நற்பெயர் அவர்களுக்கு முக்கியம்

கொஞ்சம் ஆழசென்று நோக்கினால் ரஜினியின் இமேஜூக்கு பெரும் சோதனையான காலம், இப்படி அவரிடம் இருந்து எதிர்ப்பார்க்கவில்லை என அதிருப்தியான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன‌

எப்படியோ ரஜினியின் மலேசிய அரசின் டத்தோ விருது கனவின் மீது பெரும் வெட்டரிவாளை வீசியிருக்கின்றது கபாலி, இனி அது கொஞ்சநாளைக்கு சாத்தியமில்லை.

எனக்கே கபாலி கதை சொல்லி போரடித்துவிட்டதால், இத்தோடு தலைமுழுகலாம்.

‪#‎முடிஞ்சுடா‬.................

No comments:

Post a Comment