Wednesday, July 13, 2016

கங்கை நீர் அஞ்சலகங்களில் விற்பனை

கங்கை நீர் அஞ்சலகங்களில் விற்பனை : மத்திய அரசு அறிவிப்பு

# இதே இந்தியாவில் எத்தனை லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லை, எவ்வளவு கிராமங்கள் குடிநீருக்காக படாத பாடு படுகின்றன. இன்னமும் குடங்களை சுமந்துகொண்டு அலையும் அபலைகள் நகரங்களிலும் கிராமங்களிலும் எத்தனை கோடி.

# அவர்களுக்கெல்லாம் குடிக்க நீர்வசதி செய்துதராமல் கங்கை நீரை தபால் அலுவலகங்களில் விற்கும் விசித்திரத்தை என்ன சொல்ல? நாடு எங்கே செல்கிறது?


# இன்னும் கங்கை நீர், திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், பழனி அபிஷேகபால், கல்கத்தா காளி பிரசாதம் இவை எல்லாம் விற்கும் ஸ்டால்களாக தபால் நிலையத்தை மாற்றுவார்கள்.

# இனி இந்திய தபால் நிலைய முத்திரையாக அனுமார் படம் இடம்பெறலாம். எப்படியோ கங்கையினை இந்தியா எங்கும் அழைத்து வந்த இரண்டாம் பகீரதன் என மோடியிம் தவம் செய்யும் படத்தோடு தபால்நிலையங்கள் ரெடி.

# மாநில அரசு டாஸ்மாக் தீர்த்தம் விற்கின்றது, மத்திய அரசு கங்கை தீர்த்தம் விற்கின்றது. தண்ணீர் அரசியல் இன்னும் என்னெவெல்லாம் செய்யுமோ.

மொத்தத்தில் வாக்களித்த மக்களுக்கு தண்ணி காட்டுகின்றார்கள்.

No comments:

Post a Comment