Thursday, July 21, 2016

சிதறல்கள்

மாயாவதியினை பாஜக எம்பி அவமானமாக திட்டிவிட்டாராம், அருண் ஜெட்லி மன்னிப்பு கேட்கும் அளவிற்கு சென்றிருக்கின்றது நிலமை, திட்டியது நமது கிராமபுறங்களில் கொட்டும் வசவு சொல், நிச்சயம் சொல்ல கூடாத சொல், ஒரு ஆளும்கட்சி எம்பி அதனை சொன்னது அவரின் பண்பாட்டு முதிர்ச்சியினை காட்டுகின்றது அவ்வளவுதான்

ஆனால் இதனை போல ஆயிரம் கடும் சொல், வேதனைகளை, வக்கிரமான சொற்களை தாண்டித்தான் பெரியார் போராடினார், இன்றோ ஊடகம் உச்சத்தில்இ ருக்கின்றது,

விஞ்ஞான ஜாலத்தில் தகவல் நொடிக்குள் பாக்கெட்டுக்கு வருகின்றது ஒரு வார்த்தை பேசி முடிக்குமுன் அது உலகெல்லாம் தெரிகின்றது,


மாயாவதிக்கு ஆதரவு பெருகுகின்றது

ஆனால் பெரியார் காலத்தில் என்ன இருந்திருக்கும்? அவரின் போராட்டமும், ரணமும் எவ்வளவு கொடுமையானதாக இருந்திருக்கும்?

நினைத்தாலே மலைக்கவைக்கும் தைரியமும், உறுதியும் அவரிடம் இருந்தாலன்றி அது சாத்தியமில்லை

பாஜக இம்மாதிரியான சர்ச்சைகளில் சிக்கும்போதெல்லாம் அவரின் முகம் வந்தே போகின்றது,

இந்த நாகரீக உலகத்திலே இந்த கேள்வி கேட்பவர்கள், பெரியாரை என்னவெல்லாம் கேட்டிருப்பார்கள்?

எப்படிபட்ட பெரும் நெருப்பாரினை தனி மனிதனாக தாண்டி இருக்கின்றார் அந்த ஆச்சர்ய மனிதர்.?





புரட்சி, தலித்தியம், இன விடுதலை, போராட்டம் எல்லாம் படமெடுக்க இந்தியாவில்தான் அதுவும் தமிழகத்தில்தான் சாத்தியம்.

பல‌ நாடுகள் இம்மாதிரியான குழப்பங்களை கொஞ்சமும் சகிக்காது,

உலகெல்லாம் தமிழர்கள் அடக்கி வைக்கபட்டிருப்பது போலவும், அதிலும் தலித் அரசியல் இருப்பதாகவும், அங்கெல்லாம் போராட்டங்கள் நடப்பதாகவும் காட்டபட்டால் அந்த அரசுகள் காட்சிகளை வெட்டி எறிய தயங்காது.


வரும் தகவல்களை பார்த்தால் டைட்டில்கார்டும், வணக்கம் எனும் முடிவு ஸ்டில்லும்தான் பலநாடுகளில் தெரிய வாய்ப்பு இருக்கின்றது.




 

No comments:

Post a Comment